(1746)

(1746)

நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக

மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை

பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை

காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே.

 

பதவுரை

கண்ணபுரத்து உறை அம்மானே!- ;

முன்

முந்துற

என்னை

அடியேனை

உனக்கு

உனக்கு

தொண்டு ஆக

அடியவனாக

நாட்டினாய்

நிறுத்திக்கொண்டாய்;

(அதற்குப்பிறகு அடியேன்)

அத்தனையே கொண்டு

அவ்வளவே காரணமாக

என் வல் வினையை

எனது கொடிய பாவங்களை

மாட்டினேன்

மாளச்செய்தேன்;  (அதுவுமன்றி)

பாட்டினால்

இப்படிப்பட்ட பாசுரங்களினால்

உன்னை என் நெஞ்சத்து இருந்தமை

நீ எனது நெஞ்சினுள் இருக்கிற படியை

காட்டினாய்

விளங்கச்செய்தாய்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய பாவங்கள் அகன்றுபோன படியையும் தாம் பெற்ற பேற்றையும் பேசித்தலைக்கட்டுகிறார்.

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான முடிவில் “இவரைப் பாடுவித்த முக்கோட்டை யிருந்தபடி” என்றொரு வாக்யமுள்ளது.  அதன் கருத்தாவது – மலையாளத்தில் ‘முக்கோட்டை’ என்று ஒரு இடமாம்; அவ்விடத்தில் ஊமைகள் சென்றாலும் அந்நில மிதியால் வெகு அழகாகக் கவி பாடுவர்களாம்.  (இதுமுற்கால வழக்கம் போலும்.) திருக்கண்ணபுரத்தை அந்த முக்கோட்டையாக ஆழ்வார் திருவுள்ளம்பற்றினபடி.

 

English Translation

O Lord of kannapuram! First you made me your servant.  By that alone I was rid of all my karmas.  Then through songs you revealed your presence in my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top