(1565)
எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள்,
கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய்,
இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்
நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ!
பதவுரை
|
நல் போது |
– |
நல்ல புஷ்பங்களிலே |
|
வண்டு கிண்டும் |
– |
வண்டுகள் குடையப்பெற்ற |
|
நறையூர், நின்ற நம்பீயோ!- ; |
||
|
இமையோர் |
– |
நித்யஸூரிகள் |
|
எப்போதும் |
– |
எக்காலத்திலும் |
|
பொன்மலர் இட்டு |
– |
நல்ல பூக்களை ஸமர்ப்பித்து |
|
தொழுது |
– |
வணங்கி |
|
தங்கள் |
– |
தங்களுடைய |
|
கை போது கொண்டு இறைஞ்சி |
– |
புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்ஜலிசெய்து |
|
கழல் மேல் |
– |
திருவடிகளிலே |
|
வணங்க நின்றாய் |
– |
ஆச்ரயிக்குமாறு நிற்பவனே! |
|
இப்போது |
– |
இன்று |
|
என் நெஞ்சின் உள்ளே |
– |
எனது மனத்துள்ளே |
|
புகுந்தாயை |
– |
வந்துபுகுந்த வுன்னை |
|
போகல் ஒட்டேன் |
– |
வேறிடம் போகவொட்டேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தேவரீரை வணங்கி வாழ்த்தி வழிபாடு செய்யுமவர்கள் பல்லாயிரவர் குறையற்றிருக்கச் செய்தேயும் அவர்கட்குக் காட்சிகொடுத்துக் கொண்டிருக்கு மிருப்பிற்காட்டிலும் என்னெஞ்சிலே வந்து புகுந்திருக்குமதுவே சிறப்பு என்று திருவுள்ளம்பற்றி இமையோர்களையும் விட்டு என்னெஞ்சிலே புகுந்தருளிற்று; இனி நான் போகலொட்டேன் – என்கிறார்.
பொன்மலர் – பொன்போல் விரும்பத்தக்கமலர் என்றபடி. ‘தொழுது இறைஞ்சி, வணங்க’ என்ற ஒருபொருட் பன்மொழிகள் மனமொழி மெய்களாகிற த்ரிகரணங்களினுடையவுமு் வ்ருத்தியைச் சொல்லுகின்றன வென்னலாம். கைபோது கொள்ளுதல் – அஞ்ஜலி செய்தல்.
English Translation
All the time with golden flowers, gods in sky offer worship, Folding their lotus soft hands, falling at your lotus feet, Now I have you in my heart, I shall never let you go! Bumbele-bees in nectared groves, -Naraiyur Lord-in-residence O!
