(1563)
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,
அந்தோ என் னாருயிரே அரசே அருளெனக்கு நந்தாமல்
தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ.
பதவுரை
|
என் ஆர் உயிரே |
– |
எனது அருமையான உயிர் போன்றவனே! |
|
அரசே |
– |
என்னை ஆள்பவனே! |
|
எனக்கு அருள் நந்தாமல் தந்த எந்தாய் |
– |
என் திறத்தில் கிருபையைக் குறைவின்றிச் செய்தருளின எம்பெருமானே! |
|
நறையூர் நின்ற நம்பீயோ!- ; |
||
|
எம் தாதை தாதை |
– |
நானும் என் தகப்பனும் அவன் தகப்பனும் |
|
அப்பால் |
– |
அவனுக்கு முன்புண்டான |
|
எழுவர் |
– |
ஸப்த புருஷர்களும் |
|
(ஆகப் பத்துத்தலைமுறையாக) |
||
|
பழவடிமை வந்தார் |
– |
இயற்கையான அடிமையைச் செய்து வந்தவர்கள்; |
|
என் நெஞ்சின் உள்ளே |
– |
எனது மனத்தினுள்ளே |
|
வந்தாயை |
– |
வந்து சேர்ந்த உன்னை |
|
போகல் ஒட்டேன் |
– |
இனி வேறிடம் போக வொட்டேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தாம் அனேக வம்ச பரம்பரையாகப் பகவத் விஷயத்திலே தொண்டு பட்டிருக்கும்படியை முதலடியில் வெளியிடுகிறார். நம்முடையவர்கள் இதையொரு ஏற்றமாகச் சொல்லிக் கொள்வதுண்டு; “ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்” “எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பனேழ்படிகால் தொடங்கி வந்து வழிவிழயாட் செய்கின்றோம்” இத்யாதிகள் காண்க. நான், என்னுடைய தகப்பனார், அவருடைய தகப்பனார், அவர்க்கு அப்பால் எழுவர் என்றிப்படி பாரம்பரியமாக அநந்யார்ஹ சேஷத்வத்தில் ஊன்றியிருப்போம் நாம்; இப்படி அடிமைச்சுவடு நன்கறியப் பெற்றிருக்கிற அடியேன் என்னெஞ்சினுள்ளே வந்து சேர்ந்திருக்கிற தேவரீரை இனி வேறிடம் போகவொட்டுவேனோ? என்கிறார்.
‘போகவொட்டேன்’ என்று ஆழ்வார் சொல்லச் செய்தேயும் எம்பெருமான் போகப் புக்கமைதோன்ற நின்றானாம்; அந்த நிலைமையைக் கண்டு ‘அந்தோ!’ என்கிறாராம். ஐயோ! உனக்குப் பெறாப் பேறாகக் கிடைத்த இவ்வஸ்துவையும் இழக்கப் பார்க்கலாமோ? என்றவாறு. இன்றளவும் என்விஷயத்திலே அருளைக் குறையறச் செய்துவருகின்ற நீ இன்று அருட்குறை தோன்றுமாறு அகலநினைப்பது வேண்டா வென்கை.
என் ஆருயிரே! = உன்னையோழிய ஜீவியாதபடி என் ஸத்தையை நிவஹித்துக்கொண்டு போருகிறவனே! என்றபடி.
English Translation
O Lord, Master of my father, and his father’s fathers four! Having come to live in me, how now can I let you go? O My precious soul and monarch, you gave me your grace in full. O My father-mother-Lord, Naraiyur Lord-in-residence, O!
