(669)
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே
பதவுரை
| நூலின் நேர் |
– |
நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையையுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தியிருக்கிற |
| ஞாலம் தன்னொடும் |
– |
(இந்த) ப்ராக்ருத மனிதரோடு |
|
யான் கூடுவது இல்லை;- |
||
| ஆலியா |
– |
(காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி |
| அரங்கா என்று |
– |
‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு |
| அழையா |
– |
கூப்பிட்டு |
| என் தன் மாலுக்கே |
– |
என்மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே |
|
மால் எழுந்தொழிந்தேன் – மோஹமுற்றேன். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆலியா, அழையா=‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம், ஆலித்து அழைத்து என்றபடி
English Translation
My love for the Lord grows day by day. Nor can I join the people of the world who pursue dames with thin waists. I sing and dance and call, “Aranga!” madly in love with my own sweet Lord.
