(669)

(669)

நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்

ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்

ஆலியா அழையா அரங்கா வென்று

மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே

பதவுரை

நூலின் நேர்

நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையையுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தியிருக்கிற
ஞாலம் தன்னொடும்

(இந்த) ப்ராக்ருத மனிதரோடு

யான் கூடுவது இல்லை;-

ஆலியா

(காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி
அரங்கா என்று

‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு
அழையா

கூப்பிட்டு
என் தன் மாலுக்கே

என்மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே

மால் எழுந்தொழிந்தேன் – மோஹமுற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆலியா, அழையா=‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம், ஆலித்து அழைத்து என்றபடி

English Translation

My love for the Lord grows day by day. Nor can I join the people of the world who pursue dames with thin waists. I sing and dance and call, “Aranga!” madly in love with my own sweet Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top