(348)

(348)

மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலைதன்னை

கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம் மான்தன்னை

விரதம்கொண் டேத்தும் வில்லிபுத் தூர்விட்டு சித்தன்சொல்

கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே.

பதவுரை

மருதம் பொழில்

மருகஞ்சோலைகளை
அணி

அலங்காரமாகவுடைய
மாலிருஞ்சோலைமலைதன்னை

திருமாலிருஞ்சோலை மலையை
கருதி

விரும்பி
உறைகின்ற

(அதில்) எழுந்தருளியிருக்கின்ற
கார் கடல் வண்ணன்

கருங்கடல்போன்ற நிறத்தையுடைய
அம்மான் தன்னை

அழகப்பிரனாரை
விரதம் கொண்டு

மங்கள ***

விரதமாகக்கொண்டு
ஏந்தும்

துதிக்குமாறும்
வில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான
விட்டுசித்தன்

பெரியாழ்வார்.
சொல்

அருளிச்செய்த இவற்றை
கருதி

விரும்பி
உரைப்பவர்

ஓதமவர்கள்
கண்ணன்

கண்ணபிரானுடைய
கழல் இணை

திருவடிகளை
காண்பர்கள்

ஸேவிக்கப்பெறுவார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழிகற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டுகிறார், இப்பாட்டால், மருதப்பொழில்- அர்ஜுகவ்ருக்ஷங்கள். விரதம் கொண்டு- திருப்பல்லாண்டு பாடுகை என்றிறே பெரியாழ்வாருடைய விரதம்… (கக)

English Translation

These are songs by Srivilliputtur’s Vishnuchitta, who vows worship to the dark ocean-hued lord residing in the midst of forest groves of Malirumsolai hill. Those who love to sing them will see the feet of Krishna

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top