(199)
இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம்பொன்மதிள்வெள் ளறையாய் செல்வத்தி னால்வளர் பிள்ளாய்
கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்.
பதவுரை
|
(உன் குணசேஷ்டிதங்களால்) |
||
| இன்பம் அதனை |
– |
பரமாநந்தத்தை |
| உயர்த்தாய் |
– |
(எனக்கு) மேன்மேலுண்டாக்கினவனே! |
| இமையவர்க்கு |
– |
தேவர்க்கு |
| என்றும் |
– |
எந்நாளும் |
| அரியாய் |
– |
அருமையானவனே! |
| கும்பம் |
– |
மஸ்தகத்தையுடைய |
| களிறு |
– |
குவலயாபீடத்தை |
| அட்ட |
– |
கொன்ற |
| கோவே |
– |
ஸ்வாமியே! |
| கொடு |
– |
கொடுமைதங்கிய |
| கஞ்சன் |
– |
கம்ஸனுடைய |
| நெஞ்சினில் |
– |
மநஸ்ஸிலே |
| கூற்றே |
– |
யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே! |
|
செம் பொன் மதிள் வெள்ளறையாய்! ; |
||
| செல்லத்தினால் வளர் |
– |
செல்வச் செருக்கோடு வளர்கின்ற |
| பிள்ளாய் |
– |
குழந்தாய்! |
| அங்கு |
– |
நீ இருக்கிறவிடத்தில் |
| கம்பம் |
– |
(கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கவல்ல |
| கபாலி காண் |
– |
துர்க்கையாகும்; |
|
(ஆகையால் அங்கு நில்லாமல்) |
||
| கடிது ஓடி |
– |
மிகவும் விரைந்தோடி |
|
காப்பு இட வாராய். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தைவிட்டு நான் காப்பிடும்படி விரைந்து வரவேணுமென்பதாம். கபாலி – ருத்ரனென்றுமாம். இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து கையில் கபாலங்கொண்டு பிச்சையெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால் அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு.
English Translation
O Lord giving manifold pleasures, Lord evading the celestials, Lord who killed the rutted elephant, Lord who spelt death in evil Kamsa’s heart, Lord residing in gold walled Vellarai! O Child growing up in affluence! Look, there is a skull-holder hiding behind the pillar there. Come running quickly and let me ward off the evil eye.
