(199)

(199)

இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்

கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே

செம்பொன்மதிள்வெள் ளறையாய் செல்வத்தி னால்வளர் பிள்ளாய்

கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்.

பதவுரை

(உன் குணசேஷ்டிதங்களால்)

இன்பம் அதனை

பரமாநந்தத்தை
உயர்த்தாய்

(எனக்கு) மேன்மேலுண்டாக்கினவனே!
இமையவர்க்கு

தேவர்க்கு
என்றும்

எந்நாளும்
அரியாய்

அருமையானவனே!
கும்பம்

மஸ்தகத்தையுடைய
களிறு

குவலயாபீடத்தை
அட்ட

கொன்ற
கோவே

ஸ்வாமியே!
கொடு

கொடுமைதங்கிய
கஞ்சன்

கம்ஸனுடைய
நெஞ்சினில்

மநஸ்ஸிலே
கூற்றே

யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!

செம் பொன் மதிள் வெள்ளறையாய்! ;

செல்லத்தினால் வளர்

செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய்

குழந்தாய்!
அங்கு

நீ இருக்கிறவிடத்தில்
கம்பம்

(கண்டார்க்கு) நடுக்கத்தை   விளைக்கவல்ல
கபாலி காண்

துர்க்கையாகும்;

(ஆகையால் அங்கு நில்லாமல்)

கடிது ஓடி

மிகவும் விரைந்தோடி

காப்பு இட வாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தைவிட்டு நான் காப்பிடும்படி விரைந்து வரவேணுமென்பதாம்.  கபாலி – ருத்ரனென்றுமாம்.  இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து கையில் கபாலங்கொண்டு பிச்சையெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால் அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு.

English Translation

O Lord giving manifold pleasures, Lord evading the celestials, Lord who killed the rutted elephant, Lord who spelt death in evil Kamsa’s heart, Lord residing in gold walled Vellarai! O Child growing up in affluence! Look, there is a skull-holder hiding behind the pillar there. Come running quickly and let me ward off the evil eye.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top