(198)

(198)

கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த

பிள்ளை யரசேநீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்

பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்.

பதவுரை

கள்ளம்

வஞ்சனையுடைய
சகடும்

சகடாஸுரனையும்
மருதும்

யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய

(வடிவம்) கட்டுக்குலைந்தழியும்படி
உதை செய்த

(திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே

பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ

நீ
பேயை

பூதனையினுடைய
முலைபிடித்து உண்ட பின்னை

முலையைப் பிடித்து (வாய்வைத்து) உண்டபின்பு
உள்ள ஆறு

உள்ளபடி
ஒன்றும் அறியேன்

ஒன்றுமறிகிறேனில்லை;

ஒளி உடை வெள்ளறை நின்றாய்! ;

இது

இப்போது
பள்ளிகொள்போது ஆகும்

படுத்து உறங்குகிற வேளையாகும்;

பரமனே! காப்பு இட வாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு ­மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக.  பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப்போகிறதில்லை யென்கிறாள்.

English Translation

O Lord residing in bright and beautiful Vellarai! O Child-king who destroyed the cart and the twin Arjuna trees! After you drank the milk from the ogress Putana’s breast, I cannot understand things as they really are. It is bed time now. Come, let me ward off the evil eye.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top