(158)
கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்
பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே
சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.
பதவுரை
|
எம்பிரானே-! |
||
| கறந்த | – | (அந்தந்த காலங்களில்) கறந்த |
| நல்பாலும் | – | நல்ல பாலையும் |
| தயிரும் | – | தயிரையும் |
| கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் | – | (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும், |
| பிறந்ததுவே முதல் ஆக | – | (நீ) பிறந்தவன்று தொடங்கி |
| பெற்று அறியேன் | – | கண்டறியேன் |
| சிறந்த நல்தாய் | – | ‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும் |
| அலர்தூற்றும் | – | பழி சொல்லுகின்றாளே |
| என்பதனால் | – | என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால் |
| பிறர் முன்னே | – | அயலா ரெதிரில் |
| மறந்தும் | – | ப்ராமாதிகமாகவும் |
| உரை ஆட மாட்டேன் | – | (உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன் |
|
மஞ்சனம் ஆட நீ வாராய்- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி இவன்மேல் பழிதூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன்மேல் பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.
English Translation
Ever since you were born, I have not seen fresh milk, curds or Ghee. And yet, because a good mother never finds fault, even by mistake! Do not scold you before others. My Lord, come have your bath.
