(159)

(159)

கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து

பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்

நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்

நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.


பதவுரை

கன்றினை

கன்றினுடைய
வால்

வாலிலே
ஓலை கட்டி

ஓலையைக்கட்டி
(கன்றை)

(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்லவந்த ஒரு) கன்றை

(எறிகுணிலாகக்கொண்டு, அஸுராவேசமுள்ள விளாமரத்தின்)

கனிகள்

பழங்கள்
உதிர

(கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து

வீசி
பின்

பின்பு
ஓடி தொடர்ந்து

ஓடிப்போய்
ஓர் பாம்பை

(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக்கொண்டு

பிடித்துக்கொண்டு
ஆட்டினாய் போலும்

ஆட்டினவ்னோதான் (நீ);
நம்பி

ஒன்றிலும் குறைவில்லாதவனே!

(நான்)

நின் திறத்தேன் அல்லேன் –;

உன் விஷயமொன்றையுமறியாதவளாயிரா நின்றேன்

(அதுகிடக்கட்டும்;)

நீ பிறந்த

நீ அவதரித்த
நல் திரு நாள்

திருநிஷத்திரமாகும் (இந்நாள்);

(ஆகையால்)

நீ நின்று நீர் ஆடவேண்டும்

நாரணா ஓடாதே வாராய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,’கன்றினை வாலோலை கட்டி’ என்றார். கன்றினை-உருபுமயக்கம், [நன் இத்யாதி,] ‘அத்தைச்செய்தான் இத்தைச்செய்தான்’ என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது, உன்னுடைய தன்மையை நனைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.

English Translation

You tied a palm leaf to a calf‘s tail, then threw a calf against a tree felling its fruits. You ran after a snake, grabbed and shook its tail, and danced on its hood. Alas, I am not match for you. Today is your auspicious birthday. O Narayana, do not run away. Come, you must have your bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top