(157)

(157)

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி

கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே

உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே

வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.

பதவுரை

எண்ணெய் குடத்தை

எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி

உருட்டிவிட்டு
இள பிள்ளை

(உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி

கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி

(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை

கண் இமையை
புரட்டி விழித்து

தலைகீழாக மாற்றி (அப்பூச்சி காட்டி) விழித்து
கழைகண்டு

பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும்

செய்துவருகிற
பிரானே

ஸ்வதந்த்ரனே!
கனிகள்

(நில்ல) பழங்களை
உண்ண

(நீ) உண்ணும்படி
தருவன்

(உனக்குக்) கொடுப்பேன்
ஒலி

கோஷியாகி்ன்ற
கடல்

கடலினுடைய
ஓதம்

அலைகளையுடைய
நீர் போலே

ஜலம்போலே
வண்ணம் அழகிய

திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ

உத்தமபுருஷனே!

மஞ்சனம் ஆட நீ வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அகத்திலுள்ளார் எல்லாரும் அந்யபரரம்படியாக முதலிலே எண்ணெய்க்குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக்கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம்  தீம்பு செய்பவனே!  என்றபடி.  கண் – இமைக்கு ஆகுபெயர்.  கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறிவிழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.

English Translation

O Lord of dark ocean-hue! Overturning the oil pitchers, pinching and waking up sleeping children, turning your eyelids inside out, such are the mischiefs you play. My Master, I will give you fruit to eat. Come, you must have your bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top