(140)

(140)

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராய ணாஇங்கே வாராய்

எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்

கண்ணுக்குநன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா.

பதவுரை

நண்ணி தொழுமவர்

கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை

மநஸ்ஸில்  நின்றும்
பிரியாத

விட்டு நீங்காத
நாராயணா

நாராயணனே!

(நீ)

வண்ணம்

(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்

பவழவடத்தை
மருங்கினில்

திருவரையிலே
சாத்தி

சாத்திக்கொண்டு
மலர்

தாமரைமலர் போன்ற
பாதம்

பாதங்களிலணிந்த
கிண்கிணி

சதங்கை
ஆர்ப்ப

ஒலிக்கும்படி

இங்கே வாராய்

(உன்மேல்அன்பில்லாதவர்களுக்கு)

எண்ணற்கு அரிய பிரானே

நனைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை

நூல் திரியை
எரியாமே

எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு

(உன்) காதுகளுக்கு
இடுவன்

இடுவேன்;

(அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)

கண்ணுக்கு நின்றும் அழகு உடைய

கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்சநீயமான)
கனகம் கடிப்பும்

பொற்கடிப்பும்
இவை

இவையாகும்;

ஆச்சர்யம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கீழ்ப்பாசுரத்தில் காதுகுத்த அழைத்தாள்; காதில் நூல்திரியை  இட அழைக்கிறாள் – இப்பாட்டில்.  காதுகுத்தி நூல்திரியை இட்டுக் காது பெருக்கியபின்பு காதணிகளையிடுதல் இயல்பு.  அழகும் = உம் – இசைநிறை.  “கனகக்கடிப்புமிவையாம்” என்றும் பாடம் கொள்ளலாமென்பர்.  கடிப்பு – கர்ணபூஷணம்.

English Translation

O Narayana! Forever you remain in the thoughts of those who worship you! Wearing a colorful coral band on your waist, and jingling ankle bells on your lotus feet, comes hither.  O Lord of beauty beyond imagination! I will insert the needle and thread without hurting you.  See, these golden earrings are beautiful, yes?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top