(139)

(139)

போய்ப்பா டுடையநின் தந்தையும்தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன்

காப்பாரு மில்லை கடல்வண்ணா உன்னைத் தனியேபோய் எங்கும் திரிதி

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவநம்பீ உன்னைக் காதுகுத்த

ஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்திநான் வைத்தேன்.

பதவுரை

பாடு உடைய

பெருமையை உடைய
நின் தந்தையும்

உன் தகப்பனும்
போய்

(வெளியே) போய்
தாழ்த்தான்

(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொருதிறல்

போர்செய்யுந் திறமையுள்ள
கஞ்சன்

கம்ஸனோ
கடியன்

(உன் விஷயத்தில்) மிகவும்    க்ரூரனாயிராநின்றான்;
கடல்

கடல்போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா

வடிவையுடையவனே!
உன்னை

உன்னை
காப்பாரும்

பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை

(இங்கு இப்போது) இல்லை;

(நீயோவென்றால்)

தனியே போய்

அஸஹாயனாய்ப்போய்
எங்கும்

கண்டவிடங்களிலும்
திரிதி

திரியா நன்றாய்;
பேய்

பூதனையினுடைய
முலை பால்

முலைப்பாலை
உண்ட

உட்கொண்ட
பித்தனே

மதிமயக்கமுள்ளவனே!
கேசவ

கேசவனே!
நம்பி

பூர்ணனானவனே!
உன்னை காது குத்த

உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்

இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்

எல்லாப் பெண்களும்
வந்தார்

வந்திரா நின்றார்கள்;
நான்

நானும்
அடைக்காய்

(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்

ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரானே! உன்னை ரக்ஷிப்பதில் ஸமர்த்தரான் உன் தகப்பனாரும் ‘பசுக்களின் பின்னே போய் வருகிறேன்; வருகிறவரையில் நீ பிள்ளையைக் காப்பாற்றிக் கொண்டிரு’ என்று சொல்லிச்சென்று இன்னும் வரவில்லை.  கம்ஸனோ உன்மேல் கறுக்கொண்டிருப்பதனால் எந்த ஸமயத்தில் யாரை அனுப்புவனோ என்ன செய்வனோ ஒன்றுந் தெரியவில்லை; உபாயமறிந்து காப்பாற்றவல்ல வேறொருவரும் இங்கில்லை; நீயோ பயமறியாமல் எங்குந் திரிகின்றாய்;  பல பிள்ளைகளுடன் நான் திரிந்து கொண்டிருந்தால் என்னை யாரறிவாரென்று நீ நினைக்கவேண்டா; (கடல் வண்ணா!) உன் வடிவழகே உன்னைக்கோட் சொல்லிக்கொடுக்குமே.  மேலும் பிள்ளைகளோடே விளையாடுமிடங்களில் திரிகின்றாய்; இப்படியெல்லாம் ஓடிப்போகாமல் கிட்டவா; உன்னைக் காதுகுத்த ஆய்ப்பாடிப் பெண்டுகளெல்லாரும் வந்திருக்கிறார்கள்; நான் அவர்கட்குக்கொடுக்க வெற்றிலை பாக்கு எல்லாம் ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன் – என்று சொல்லி யழைக்கிறாள் யசோதை – ‘போய்’ என்பதை மிகுதிக்கு வாசகமாகக் கொண்டு ரக்ஷ்யவர்க்கத்தினுடைய ரக்ஷணத்திலே மிகவும் கோபமுடையவனாய் “கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன்” என்கிறபடியே நீ பிறந்தவன்று தொடங்கித் தமது வேலாயுதத்தைக் கூர்மையாகத் தீட்டிக்கொண்டு நீ படுக்குந் தொட்டிற்கீழே ஓரெறும்பு ஊர்ந்தாலும்  சிங்கத்தின்மேற் சீறுமாபோலே சீறி உன்னைக் காப்பாற்றுவதில் மிகவும் ச்ரத்தையையுடையனான என்றும் பொருளாம்.  திரிதி – முன்னிலையொருமை வினைமுற்று.  அடை – இலை = வெற்றிலை; காய் – பாக்கு.

English Translation

O Kesava! Your father has gone out and does not return.  Alas the strong fierce Kamsa is cruel and there is none to protect you.  O Ocean-hued Lord! You go alone and roam everywhere.  O Mad child who took suck from Putana’s breasts, the cowherd-girls have all assembled.  O Master, I have kept the auspicious betel leaf and Areca nut ready for your ear-boring ceremony.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top