(141)

(141)

வையமெல் லாம்பெறும் வார்கடல் வாழும் மகரக் குழைகொண்டு வைத்தேன்

வெய்யவே காதில் திரியை யிடுவன்நீ வேண்டிய தெல்லாம் தருவன்

உய்யஇவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடராயர்கொ ழுந்தே

மையன்மை செய்துஇள வாய்ச்சிய ருள்ளத்து மாதவ னேஇங்கே வாராய்.

பதவுரை

உய்ய

(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய

இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒன் சுடர்

மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே

இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்

இந்தவுலகங்களையெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக்கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை

பெரிய கடலிலே வாழ்கின்ற சுறாமீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை
கொண்டு வைத்தேன்

(உன்காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே

வெம்மையுடனிருக்கும்படி
காதில் திரியை இடுவன்

(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்

நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
தருவன்

கொடுப்பேன்;
மா தவனே

ச்ரியபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து

மடமைப் பருவமுடைய இடைப்பெண்கள் மநிஸ்ஸலே
மையன்மை செய்து

வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு

இங்கே வாராய்:-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – நீ இப்போது திரியையிட்டுக்கொண்டால் பின்பு பொற்கடிப்பு மாத்திரமல்ல மிகச்சிறந்த மகாகுண்டலங்களையும் அணியலாம்; காது தினவு தின்னாமலிருக்க வெப்பமாகவே திரியையிடுவேன்; உனக்கு வேண்டிய பணியாரங்களையும் பழங்களையும் தருவேன்; நீ வரவேணும் என்று சொல்லி யழைக்கிறாள்.  வெப்பு தினவுக்குப் பரிஹாரமாதலால் ‘வெய்யவே காதில் திரியையிடுவேன்’ என்றாள்.

English Translation

O Madhava! O Radiant child born to deliver this cowherd clan! I have brought for you these ear-pendants in the shape of the deep-sea Makara fish, which all the world raves about.  You infatuate young cowherd-dames and live in their hearts.  I shall bore your ears quickly.  I will give you all that you ask for.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top