(975)

(975)

ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்

கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,

நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில்,

வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே.

 

பதவுரை

இருமி இளைத்தீர்

“(ஐயங்கார்களே!) இருமலும் இளைப்புமாக ஆனீர்கள்;

உள்ளம் கூசியிட்டீர்

நெஞ்சு கூசப் பெற்றீர்கள்;

போமின்

அப்பால் ஒழிந்து போங்கள்

ஈ சி

சீ சீ ;

ஈங்கு இரேல்மின்

இங்கே இருக்கக்கூடாது;”

என்று பேசும்

என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற

குவளை அம் கண்ணியர் பால்

கருநெய்தல் போன்ற அழகிய கண்ணையுடைய மாதர்களிடத்து

நாசம் ஆன பாசம் விட்டு

ஸ்வரூபநாசத்தை விளைக்க வல்ல ஆசாபாசத்தை விட்டுத் துலைத்து

நல் நெறி நோக்கல் உறில்

நல்வழி போகப்பார்க்கும் பக்ஷத்தில்

வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதும்

பரிமளம் மிக்குக் குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

ஈசிபோமி னீங்கிரேன்மின் இருமியீளைத்தீர் * உள்ளம்

கூசியிட்டீ ரென்றுபேசும் குவளையங் கண்ணியர்பால் *

நாசமான பாசம்விட்டு நன்னெறி நோக்கலுறில் *

வாசம்மல்கு தண்டுழாயான் வதரி வணங்குதுமே.

 

***-[ஈசிபோமின்.) * முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடேறும்போதே, சீ சீ, நட, நட” என்று துரத்தியடிப்பர்கள் ; வாசலை விடமாட்டாத சாபல்யத்தாலே ‘அம்மா! நான் உள்ளே வரவில்லை; தெருத்திண்ணையிலேயே கிடந்து போகிறேன்’ என்று விநயமாகச் சொல்லி உட்காரப் பார்த்தவளவில், ஈங்கிரேல்மின்’ என்று வெருட்டுவர்கள்; பண்டெல்லாம் ‘ என்னைவிட்டுப் பிரியக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருந்த நீங்கள் இன்று இங்கனே வெருட்டுவானேன் என்று கேட்டால், இருமி இளைத்தீர், உள்ளம் கூசியிட்டீர் என்பர்கள். அப்படி சொல்லி வெருட்டும் போதும் பாவக் கொடுமையாலே அந்தப் பிளிச்சைக்கண்ணிகளிடத்துப் பாசம் ஒழியாது மயங்கி நிற்குங்கள் கிழப்பிணங்கள்; ஆசாபாசம் விடவொண்ணாதே. அந்த ஆசாபாசம் ஸ்வரூப நாசத்துக்கே உறுப்பாகையாலே அதனை விட்டொழித்து நல்வழிசேர நினைவுண்டாகில் வதரி வணங்குதல் நன்று.

ஈசி-சீ சீ’ என்ற இழிவுரையின் விகார அநுகாரம். குவளையங்கண்ணியர் என்றது-கண்ணழகிலே துவண்டு நிற்கும் கிழப்பிணங்களின் கருத்தாலே யாம். நாசமான என்றது-நாச ஹேதுவான என்றபடி. பாசம்- அன்பு. நன்னெறி – அர்ச்சிராதி மார்க்கம் என்னலாம். …  …    …. ௮

English Translation

Lotus-eyed dames will say, “Ee, Yech, Go away, don’t sit here. Your coughs and moans make our hearts shudder”. ‘Ere that happens, — if you wish to seek a new path, give up your damning passions and seek the Lord with fragrant Tulasi wreath, — Worship Him in Vadari.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top