(974)
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப, ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும்நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே.
பதவுரை
|
சீத் திரளை ஒப்ப |
– |
சீயின் திரட்சிபோல |
|
ஐக்கள் |
– |
கோழையானது |
|
போத உந்த |
– |
மிகவும் அதிகரிக்க, (அந்த நிலைமையைக் கண்டு) |
|
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் |
– |
செப்புப் போன்ற மெல்லிய முலைகளையுடைய மங்கைமார்கள் |
|
பப்ப அப்பர்மூத்த ஆறு பாழ்ப்பது |
– |
“அப்பப்ப! இந்த சாமியார் கிழத்தன மடைந்த விதம் மிகவும் பொல்லாது” (என்று தங்களில் சொல்லிக்கொண்டும்) |
|
உம் தமர் காண்மின் என்று |
– |
“அடீ!உங்களோடு உறவுள்ள ஐயங்காரைப் பாருங்கள்” என்று(அயற்பெண்களோடே ஏளனமாகச் சொல்லியும்) |
|
சிரியாத முன்னம் |
– |
சிரிப்பதற்கு முன்னமே-, |
|
நங்கள் வைப்பும் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதும் |
– |
நமக்கு நிதி போன்றவனும் நம்மை வாழ்விப்பவனுமான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
பப்பவப்பர் முத்தவாறு பாழ்ப்பது சீத்திரளை
யொப்ப * ஐக்கள் போதவுந்த உந்தமர் காண்மினென்று * –
செப்புநேர்மென் கொங்கைநல்லார் தாம்சிரி யாதமுன்னம் *
வைப்பும் நங்கள் வாழ்வுமானான் வதரி வணங்குதுமே.
***- (பட்பவப்பர்.) உலகில் விசித்திரமானதொன்றைப் பார்க்கும்போ தும் விகாரமானதொன்றை பார்க்கும்போதும் கண்கூசி அப்பப்ப! என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டுகாலாவூன்றியூன்றித் தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதியேறச் சென்றவாறே அளவு கடந்த கிழத் தன விகாரங்களைக்கண்டு அந்த மாதர்கள் ‘அப்பப்ப!’ என்று தங்களுக்குள்ளே அதிசயித்து, ‘உலகில் எல்லாரும் கிழத் தனமடைவதுண்டு; இதென்னடோயப்பா! ‘இப்படிப்பட்ட கிழத்தனம் எங்குங் கண்டதில்லை. மிகவும் பொல்லாத கிழத்தனமாயிருக்கின்றதே இது;’ என்று சொல்லிச் சிரிப்பர்கள் ; அவ்வளவோடு நில்லாமல் அண்டைவீட்டுக் காரிகளை யழைத்து ‘உங்கள் எஜமானர் வந்திருக்கிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டியும் சிரிப்பர்கள் ; அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவ தற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று.
ஐ என்றும் ஐக்கள் என்றும் ஐயார் என்றும் கோழைக்குப் பெயர். உந்தமர் காண்மின் = உண்மையில் தாங்கள் விரும்பி ஆதரித்திருந்த புருஷர்களாயிருந் தாலும் அப்போதைய நிலைமையைக்கண்டு வெறுத்துத் தங்களுக்கொரு உறவு சொல்லிக்கொள்ள வெள்கி அயற்பெண்டுகளை யழைத்து : உங்களவர் வந்தார், பாருங்கள் ‘ என்று சொல்லி ஏசிச் சிரிப்பர்களாம் செப்பு நேர்மென் கொங்கை நல்லார் தாம். இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்;- “இவன் பக்கல் யௌவனமும் கையில் வீசமும் உள்ள வன்று எல்லாருமொக்க என்தமர் என் தமர் என்பர்கள் ; கையில் வீசமும் போய் ‘இவனோட்டை ஸம்பந்தம் நமக்கு அவத்யாவஹம்’ என்று தோற்றும்படி யௌவனமும் போன வாறே உன்னுடையவன் என்றும், மற்றையவளும் ‘உன்னோடேயன்றோ அவனுக்கு உறவு’ என்றும் தங்களோடே தொற்றறச் சொல்லிப் பிணங்கா நிற்பர்கள்,”
செப்புநேர்மென் கொங்கைநல்லார் என்று விசேஷித்ததற்கு விநோதமாகக் கருத்து அருளிச்செய்வர் பெரியவாச்சான் பிள்ளை;- “இவனைக்கொண்டு போது போக்குகைக்காக முலைக்கச்சை நெகிழ்த்தி முலையினுடைய ஸந்நிவேசத்தைக் காட்டுவர்கள் ; இவன் கண்ணை விடுத்து எழப் பார்க்கும் ; அதைக்கண்டு ‘பிள்ளாய்! இவன் இவற்றோடு என்ன உறவுண்டாய்ப் பார்க்கிறான் ! ஐயோ!’ என்று சிரிப்பர்களாயிற்று.”
நங்கள்வைப்பும் வாழ்வுமானான் = எம்பெருமானே உபாயம், அவனே உபேயம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது. வைப்பு என்று உபாயத்வமும், வாழ்வு என்று உபேயத்வமுஞ் சொல்லிற்றாம். ……(௭)
English Translation
Copper-hued-breasted beautiful dames will say, “Old age is terrible. , Look at this man spitting phlegm”, and laugh at you. ‘Ere that happens, –our wealth and our life is our Lord, — Worship Him in Vadari.
