(924)
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய் அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.
பதவுரை
வழங்க |
– |
(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக) |
வம்பு அவிழ் |
– |
பரிமளம் மிகுந்த |
வாயுறை |
– |
அறுகம்புல்லும் |
மா |
– |
சிறந்த |
நிதி |
– |
சங்கநிதி பத்மநிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு) |
வானவர் |
– |
தேவர்களும் |
கபிலை |
– |
காமதேநுவும் |
ஓண் |
– |
ஓளி பொருந்திய |
கண்ணாடி முதலா |
– |
கண்ணாடி முதலாக, |
எம்பெருமான் |
– |
ஸ்வாமியான தேவரீர் |
காண்டற்கு |
– |
கண்டருளுகைக்கு |
ஏற்பன ஆயின |
– |
தகுதியாயுள்ளவையான |
படிமைக்கலம் |
– |
உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு |
நல்முனிவர் |
– |
மஹர்ஷிகளும் |
தும்புரு நாரதர் |
– |
தும்புரு நாதர்களும் |
புகுந்தனர் |
– |
வந்து நின்றார்கள் |
(இதுவுமின்றி,) |
||
இரவியும் |
– |
சூரியனும் |
துலங்கு ஒளி |
– |
(தனது) மிக்க தேஜஸ்ஸை |
பரப்பி |
– |
எங்கும் பரவச் செய்து கொண்டு |
தோன்றினன் |
– |
உதயமானான்; |
இருள் |
– |
இருளானது |
அம்பரதலத்தில் நின்று |
– |
ஆகாசத்தினின்றும் |
போய் அகல்கின்றது |
– |
நீங்கிப்போயிற்று; |
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “வம்பவிழ்” என்பதை வானவர்க்கே அடைமொழியாக்கி, நித்ய யெளவநத்தையுடைய தேவஜாதிகள் என்றும் பொருள் கொள்ளலாம். படிமைக்கலம்- திருவாராதந உபகரணம். நிதி, கபிலா, தும்புருநாரதர், ரவி, அம்பரதலம் -வட சொற்கள்.
English Translation
With celestials reciting sonorously, the great cow Kapila in front and a beautiful mirror held aloft the good sages stand on their toes for a glimpse of your face. The celestial bards Tamburu and Narada have entered. The Sun has made his appearance with radiant rays. The darkness of the hall has disappeared. O Lord of Arangam, pray wake up