(922)

(922)

இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ இறையவர் பதினொரு விடையரு மிவரோ

மருவிய மயிலின னறுமுக னிவனோ மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி

புரவியோ டாடலும் பாடலும் தேரும் குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்

அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.

பதவுரை

மணி

விலக்ஷணமாய்
நெடு

பெரிதான
தேரோடும்

தேரோடுகூட
இரவியர்

பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்

ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்

ஏகாதச ருத்ரர்களும்
மருவிய

பொருந்திய
மயிலினன்

மயில்வாகனத்தையுடைய
அறுமுகன்

ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்

மருத்கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்

அஷ்டவஸுக்களும்
வந்து வந்து

ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு வந்து
ஈண்டி

நெருங்கி நிற்க

இவர்களுடைய வாஹநமான

புரவியோடு தேரும்

குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்

பாட்டும் கூத்துமாய்
குமரதண்டம் புகுந்து

தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்

நெருங்கியிருக்கிற திரளானது
அரு வரை அனைய

பெரிய மலை போன்ற
கோயில்

கோயிலில்
நின் முன்

தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)

அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- த்வாதசாதித்யர்கள், ஏகாதசருத்ரர்கள, தேவஸேநாபதியான ஷண்முகன், மருத்துக்களாகிற தேவதைகள், அஷ்டவஸுக்கள் மற்றும் சொல்லிச் சொல்லாத தேவதைகளெல்லாம் பரிகாஸமேதராய், தேவாரீர் திருப்பள்ளியுணர்ந்தருளும் போதில் முதற் கடாக்ஷவீக்ஷணத்தை விரும்பி “நான் முற்பட நான் முற்பட” என்று திரண்டு வந்து நின்றார்கள்; திருப்பள்ளியுணர்ந்தருளிக் கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

“[குமரதண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்] ‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே ‘குமரன்’ என்று அவன் பேராய், ‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக்கடவதிறே அங்ஙனன்றியே, தேவஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே இனி, தண்டம் என்கிறது அவ்வவராயுத பேதங்களை யென்னவுமாம்” என்பது வியாக்யானம்.

English Translation

This here is the Sun god, rider of the jeweled chariot. This here is the Lord of the eleven Adityas. This here is the six, faced Subramanya, rider of the peacock. These here are the Maruts and the Vasus in throngs, dancing and singing in delight crowding the great hall in front of your sanctum. O Lord of Arangam, pray wake up.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top