(921)

(921)

புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய் போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி

கலந்தது குணதிசை கனைகட லரவம் களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த

அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான் அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா

இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் எம்பெரு மான்.பள்ளி யெழுந்தரு ளாயே.

பதவுரை

பூ

பூத்திராநின்றுள்ள
பொழில்களின் வாய்

சோலைகளிலுள்ள
புட்களும்

பறவைகளும்
புலம்பின

(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யாநின்றன;
போயிற்று

கழிந்தது;
புலரி

ப்ராத: காலமானது
புகுந்தது

வந்தது;
குண திசை

கீழ்த்திசையிலே
கனை

கோஷஞ்செய்கிற
கடல்

கடலினுடைய
அரவம்

ஒசையானது
கலந்தது

வியாபித்தது;
களி

தேனைப்பருகிப் களிக்கின்ற
வண்டு

வண்டுகளானவை
மிழற்றிய

சப்தியாநிற்கிற
கலம்பகன் புனைந்த

பலவகைப் பூக்களாலே தொடுக்கப்பட்ட
அம்

அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு

அலங்கல்மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்

தேவர்கள்
அடி இணை பணிவான்

(தேவரீருடைய திருவடியிணைகளில் பணிமாறுகைக்காக
புகுந்தனர்

வந்துநின்றனர்;
ஆதலில்

ஆகையாலே,
அம்மா

ஸர்வஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்

லங்கேச்வரனான விபீஷ ணாழ்வான் தாஸவ்ருத்தி பண்ணப்பெற்ற கோயிலிலே (கண்வளர்ந்தருளுகிற)

எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்பாட்டில் வயற்காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது; அவ்வளவேயல்ல; சோலைவாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப்பெறாதே பரமஸுகமாகக் கிடந்துறங்கக்கடவ பறவைகளும் போதுவைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது. வயலுள் வண்டுகள் உணர்ந்தது பகவத்ப்ரவணர் உணர்ந்ததொக்கும் என்பர் பெரியவாச்சான்பிள்ளை. உறங்கு கைக்கே அதிக ஸாமக்ரியுள்ள ஸம்ஸாரிகள் உணர்வதன்றோ அருமை.

பொழில்களின் வாய்=வாய்-ஏழனுருபு. அரவம் என்ற வடசொல் விகாரம்.

English Translation

The birds in the groves are chirping, night has passed, day has broken, and the sea has been to roar with waves. The bumble bees are humming. The gods have entered with Kadamba garlands to serve you. O Lord of Arangam worshipped by Lanka King Vibhishana, pray wake up.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top