(89)

(89)

கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக் கணகண சிரித்துவந்து

முன்வந்து நின்று முத்தம் தரும்என் முகில்வண்ணன் திருமார்வன்

தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.

பதவுரை

கன்னல் குடம்

கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்

பொள்ளல் வி்ட்டால் (அப்பொள்ளல் வழியாகச் சாறுபொசிவதை)
ஒத்து

போன்று
ஊறி

(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கணகண

கணகணவென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து

ஸந்தோஷித்து
முன்வந்து நின்று

என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்

(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மையுள்ளவனும்
என் முகில் வண்ணன்

எனது முகில்போன்ற திருநிறத்தையுடையவனும்
திரு

பெரியபிராட்டியார்
மார்வன்

மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு

தன்னைப் பெற்ற எனக்கு
தன்

தன்னுடைய
வாய் அமுதம்

அதராம்ருதத்தை
தந்து

கொடுத்து
என்னை

(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தையுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்

தழைக்கச்செய்கிறான்,
(இவன்)

தன் ஏற்றும்

தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்

சத்ருக்களுடைய
தலைகள் மீதே

தலைகளின் மேலே (அடியிட்டு)

தளர்நடை நடவானோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – தன் வாயில் நின்றும் கரும்பு ரஸம்போல் இனிமையான நீர் வெளிப்பட்டு வடியும்படி சிரித்துக்கொண்டு வந்து எனக்கு முத்தங் கொடுக்கும் தன்மையுள்ளவன் கண்ணனென்பது – முன்னிரண்டடிகளின் கருத்து.  கணகண – வாய்விட்டுச் சிரிக்கும்போது உண்டாகின்ற ஒலிக்குறிப்பு.  இவன் நடக்கிற நடையழகுகண்டே சத்ருக்கள் சாகவேணுமென்பது ஈற்றடியி்ன் கருத்து.

English Translation

My cloud-hued Lord with Sri on his chest comes forward, giggles and gives me a     kiss; his spittle, flowing from his mouth like the froth over a can of sugarcane juice, makes me tremble.  Is he going to come toddling now, over the heads of those who oppose him?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top