(89)
கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக் கணகண சிரித்துவந்து
முன்வந்து நின்று முத்தம் தரும்என் முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.
பதவுரை
| கன்னல் குடம் |
– |
கருப்பஞ்சாறு நிறைந்த குடம் |
| திறந்தால் |
– |
பொள்ளல் வி்ட்டால் (அப்பொள்ளல் வழியாகச் சாறுபொசிவதை) |
| ஒத்து |
– |
போன்று |
| ஊறி |
– |
(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய |
| கணகண |
– |
கணகணவென்று சப்தமுண்டாகும்படி சிரித்து |
| உவந்து |
– |
ஸந்தோஷித்து |
| முன்வந்து நின்று |
– |
என் முன்னே வந்து நின்று |
| முத்தம் தரும் |
– |
(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மையுள்ளவனும் |
| என் முகில் வண்ணன் |
– |
எனது முகில்போன்ற திருநிறத்தையுடையவனும் |
| திரு |
– |
பெரியபிராட்டியார் |
| மார்வன் |
– |
மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன் |
| தன்னை பெற்றேற்கு |
– |
தன்னைப் பெற்ற எனக்கு |
| தன் |
– |
தன்னுடைய |
| வாய் அமுதம் |
– |
அதராம்ருதத்தை |
| தந்து |
– |
கொடுத்து |
| என்னை |
– |
(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தையுடைய) என்னை |
| தளிர்ப்பிக்கின்றான் |
– |
தழைக்கச்செய்கிறான், |
| (இவன்) |
– |
|
| தன் ஏற்றும் |
– |
தன்னோடு எதிர்க்கிற |
| மாற்றலர் |
– |
சத்ருக்களுடைய |
| தலைகள் மீதே |
– |
தலைகளின் மேலே (அடியிட்டு) |
|
தளர்நடை நடவானோ. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – தன் வாயில் நின்றும் கரும்பு ரஸம்போல் இனிமையான நீர் வெளிப்பட்டு வடியும்படி சிரித்துக்கொண்டு வந்து எனக்கு முத்தங் கொடுக்கும் தன்மையுள்ளவன் கண்ணனென்பது – முன்னிரண்டடிகளின் கருத்து. கணகண – வாய்விட்டுச் சிரிக்கும்போது உண்டாகின்ற ஒலிக்குறிப்பு. இவன் நடக்கிற நடையழகுகண்டே சத்ருக்கள் சாகவேணுமென்பது ஈற்றடியி்ன் கருத்து.
English Translation
My cloud-hued Lord with Sri on his chest comes forward, giggles and gives me a kiss; his spittle, flowing from his mouth like the froth over a can of sugarcane juice, makes me tremble. Is he going to come toddling now, over the heads of those who oppose him?
