(843)
விடைக்குலங்க ளேழடர்த்து வென்றிவேற்கண் மாதரார்
கடிக்கலந்த தோள்புணர்ந்த காலியாயவேலைநீர்
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்து நின்றனக்கு
அடைக்கலம்பு குந்தவென்னை யஞ்சலென்ன வேண்டுமே.
பதவுரை
| வேலை நீர் |
– |
ஜலதத்துவமாகிய கடலை |
| படைத்து |
– |
(முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும் |
| அடைத்து |
– |
(ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்; |
| அதில் கிடந்து |
– |
(தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும் |
| முன் |
– |
முன்னொருகாலத்திலே |
| கநைடபுது |
– |
(தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்) |
| ஏழ்விடை குலங்கள் |
– |
நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும் |
| அடர்ந்து |
– |
கொழுப்படக்கி |
| வென்றிவேல் மண்மாதரர் |
– |
ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய |
| கடி கலந்த |
– |
பரிமளம் மிக்க திருத்தோளோடே |
| புணர்ந்த |
– |
ஸம்ச்லேஷித்த |
| காலி ஆய |
– |
கோபாலகிருஷ்ணனே! |
| நின் தனக்கு |
– |
உன் பக்கலிலே |
| அடைக்கலம் புகுந்த என்னை |
– |
சரணம் புகுந்த என்னை நோக்கி |
| அஞ்சல் என்ன வேண்டும் |
– |
“பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அபயப்ரதாநம் செய்தருளினாற் போலவும் அர்ஜுநனை நோக்கி “மாசுச:” என்றாற்போலவும் அடியேனைநோக்கி அஞ்சேல் என்றருளிச் செய்யவேணும் பிரானே! என்கிறார். “முன்கடைந்த நின்றனக்கு” என்றும் பாடமுண்டு. அஞ்சல்- எதிர்மறை வினைமுற்று.
English Translation
O Cowherd-Lord, you fought the bulls in contest for the Pinnai-dame, you came along with victory and took the lady in your brace. O Lord you made and churned the ocean, slept on it and made a bridge! I seek refuge in you alone, assure me safety, say “No fear”.
