(844)
சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே
விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே
கரும்பிருந்த கட்டியேக டல்கிடந்த கண்ணனே
இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே.
பதவுரை
| கரும்பு இருந்த கட்டியே |
– |
கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே! |
| கடல் கிடந்த கண்ணனே |
– |
திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே! |
| இரும்பு |
– |
இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள் |
| அரங்க |
– |
அழியும்படி |
| வெம்சரம் |
– |
தீக்ஷ்ணமான அம்புகளை |
| துரந்த |
– |
பிரயோகித்த |
| வில் |
– |
ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே! |
| இராமனே |
– |
இராமபிரானே! |
| அரங்கம் வாணனே |
– |
கோயிலில் வாழ்பவனே |
| கரும்பு |
– |
வண்டுகளானவை |
| அரங்கு |
– |
படிந்திருக்கபெற்ற |
| தண் துழாய் |
– |
குளிர்ந்த திருத்துழாய் |
| துதைத்து |
– |
நெருங்கி |
| அலர்ந்த |
– |
விசுஸித்திருக்கப்பெற்ற |
| பாதமே |
– |
(உனது) திருவடிகளையே |
| விரும்பி நின்று |
– |
ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு |
| இறைஞ்சு வேற்கு |
– |
தொழுகின்ற அடியேன் பக்கல் |
| இரங்கு |
– |
க்ருபைபண்ணியருள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “அஞ்சலென்னவேண்டுமே” என்று அபயப்ரதாநமாத்ரத்தை வேண்டினாயினும் அவ்வளவினால் த்ருப்திபெறக் கூடியவரல்லரே; பெரியபெருமாள் திருவடிகளிலே நித்யாநுபவம் அபேக்ஷிதமாயிருக்குமே; அவ்வநுபவம் வாய்க்குமாறு கிருபை செய்தருளவேணுமென்கிறார் இதில். “நான்காமடியில், இரும்பு போல் வலியநெஞ்சினரான அரக்காக என்ன வேண்டு மிடத்து இரும்பு என்று அபேதமாகச் சொன்னது ரூபகாதிரயோக்தியாம். அரங்குதல்- (இங்கு) அழிதல்.
English Translation
O Lord with lovely lotus-feet and fragrant nectar-Tulasi wreath, O Sweetness of the cane-sugar, dear-to-eyes in ocean-deep! O The mighty bow-wielder who fired a rain of speeding darts! O Lord of Rangam-oor, I pray you heed the call of devotees.
