(844)

(844)

சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே

விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே

கரும்பிருந்த கட்டியேக டல்கிடந்த கண்ணனே

இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே.

பதவுரை

கரும்பு இருந்த கட்டியே

கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே!
கடல் கிடந்த கண்ணனே

திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே!
இரும்பு

இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள்
அரங்க

அழியும்படி
வெம்சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

பிரயோகித்த
வில்

ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே

இராமபிரானே!
அரங்கம் வாணனே

கோயிலில் வாழ்பவனே
கரும்பு

வண்டுகளானவை
அரங்கு

படிந்திருக்கபெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய்
துதைத்து

நெருங்கி
அலர்ந்த

விசுஸித்திருக்கப்பெற்ற
பாதமே

(உனது) திருவடிகளையே
விரும்பி நின்று

ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு
இறைஞ்சு வேற்கு

தொழுகின்ற அடியேன் பக்கல்
இரங்கு

க்ருபைபண்ணியருள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “அஞ்சலென்னவேண்டுமே” என்று அபயப்ரதாநமாத்ரத்தை வேண்டினாயினும் அவ்வளவினால் த்ருப்திபெறக் கூடியவரல்லரே; பெரியபெருமாள் திருவடிகளிலே நித்யாநுபவம் அபேக்ஷிதமாயிருக்குமே; அவ்வநுபவம் வாய்க்குமாறு கிருபை செய்தருளவேணுமென்கிறார் இதில். “நான்காமடியில், இரும்பு போல் வலியநெஞ்சினரான அரக்காக என்ன வேண்டு மிடத்து இரும்பு என்று அபேதமாகச் சொன்னது ரூபகாதிரயோக்தியாம். அரங்குதல்- (இங்கு) அழிதல்.

English Translation

O Lord with lovely lotus-feet and fragrant nectar-Tulasi wreath, O Sweetness of the cane-sugar, dear-to-eyes in ocean-deep! O The mighty bow-wielder who fired a rain of speeding darts! O Lord of Rangam-oor, I pray you heed the call of devotees.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top