(794)

(794)

வெஞ்சினத்த வேழவெண்ம ருப்பொசித்து உருத்தமா

கஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே

வஞ்சனத்து வந்தபேய்ச்சி யாவிபாலுள் வாங்கினாய்

அஞ்சனத்த வண்ணனாய ஆதிதேவ னல்லையே.

பதவுரை

வெம்சினந்த

உக்ரமான கோபத்தையுடைய
வேழம்

குவலயாபீட மென்னும் யானை யினுடைய
வெண் மருப்பு

வெண்ணிறமான தந்தத்தை
ஒசித்து

ஒடித்து (அந்த யானையை முடித்து)
உருத்த

கோபிஷ்டனாயும்
மா

பல்ஷ்டனாயுமிருந்த
கஞ்சனை

கம்ஸனை
கடிந்து

வதைசெய்து
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி

வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை
பாலுன் வாங்கினாய்

முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே!
மண் அளந்து கொண்ட காலனே!

(த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ.
அஞ்சனந்த வண்ணன் ஆய

மைபோன்ற காந்தியையுடையனான
ஆதிதேவன் அல்லையே

ஆதிபுருஷனன்றோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவளவேயன்றிக்கே க்ருஷ்ணனாய் வந்தவதரித்த மண்ணின் பாரமான கம்ஸனைக் கூண்டோடு களைத்தருளுகையாலும், அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடோதிகளோடு வாசியின்றி எல்லார் தலைகளிலும் த்ரிவிக்ரமனாய்த் திருவடிகளை வைத்து ஸர்வேஷித்வத்தை விளக்கிக்கொண்டபடியாலும் ஜதத்காரணபூதன் நீயேயென்கிறார்.

English Translation

O Lord with feet that took the Earth, O Lord who broke the tusker tooth! O Lord who killed the anger king, — the Kamsa-Lord who meant you harm! O  Lord who sucked the poison breast of Putana and took her life! O lord who came as cowherd lad, o Lord of gods of darkest hue!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top