(794)
வெஞ்சினத்த வேழவெண்ம ருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்தபேய்ச்சி யாவிபாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய ஆதிதேவ னல்லையே.
பதவுரை
| வெம்சினந்த |
– |
உக்ரமான கோபத்தையுடைய |
| வேழம் |
– |
குவலயாபீட மென்னும் யானை யினுடைய |
| வெண் மருப்பு |
– |
வெண்ணிறமான தந்தத்தை |
| ஒசித்து |
– |
ஒடித்து (அந்த யானையை முடித்து) |
| உருத்த |
– |
கோபிஷ்டனாயும் |
| மா |
– |
பல்ஷ்டனாயுமிருந்த |
| கஞ்சனை |
– |
கம்ஸனை |
| கடிந்து |
– |
வதைசெய்து |
| வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி |
– |
வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை |
| பாலுன் வாங்கினாய் |
– |
முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே! |
| மண் அளந்து கொண்ட காலனே! |
– |
(த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ. |
| அஞ்சனந்த வண்ணன் ஆய |
– |
மைபோன்ற காந்தியையுடையனான |
| ஆதிதேவன் அல்லையே |
– |
ஆதிபுருஷனன்றோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவளவேயன்றிக்கே க்ருஷ்ணனாய் வந்தவதரித்த மண்ணின் பாரமான கம்ஸனைக் கூண்டோடு களைத்தருளுகையாலும், அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடோதிகளோடு வாசியின்றி எல்லார் தலைகளிலும் த்ரிவிக்ரமனாய்த் திருவடிகளை வைத்து ஸர்வேஷித்வத்தை விளக்கிக்கொண்டபடியாலும் ஜதத்காரணபூதன் நீயேயென்கிறார்.
English Translation
O Lord with feet that took the Earth, O Lord who broke the tusker tooth! O Lord who killed the anger king, — the Kamsa-Lord who meant you harm! O Lord who sucked the poison breast of Putana and took her life! O lord who came as cowherd lad, o Lord of gods of darkest hue!
