(793)
வேறிசைந்த செக்கர்மேனி நீரணிந்த புஞ்சடை
கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை
ஊறுசெங்கு ருதியால்நி றைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச பேசுகூச மின்றியே.
பதவுரை
| கூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச |
– |
கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை! |
| வேறு |
– |
வேறாக |
| இசைக்க |
– |
ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான |
| செக்கர் மேனி |
– |
சிவந்த உடலையுடையனாய் |
| நீறு அணிந்த |
– |
பஸ்தாரியாய் |
| புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த |
– |
ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன் |
| கை வைத்த |
– |
தன்கையில் வைத்துக் கொண்டிருந்த |
| வல் கபால் மிசை |
– |
வலிதான கபாலத்தை |
| ஊறுசெம் குருதியால் |
– |
உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே |
| நிறைந்த காரணம்தனை |
– |
நிறைந்த காரணத்தை |
| பேசு |
– |
அருளிச் செய்யவேணும். |
| பாட்டு |
|
பாலினீர்மை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “அரசுடைய கபாலத்தை நிறைந்தது எதற்காக? சொல்” என்று கேட்பதற்குக் கருத்து- நீ ஸர்வஸ்மாத்பரனாய் அவன் உன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவனாயிருக்கையாலே அவன் யாசிக்கவும் நீ அவனை அநுக்ரஹிக்கவும் நேர்ந்ததென்று நாங்களெல்லாரும் நினைத்திருக்கிறாய்; இப்படி உனது பரத்வத்தை வெளியிடுதல் தவிர வேறு காரணமுண்டாகில் அருளிச்செய்யவேறும் என்கை.
“கூசமின்றியே பேசு” என்றாவது, “கூசமின்றியே ஏறு சென்றடர்த்தவீச!” என்றாவது அந்வயிக்கலாம். “ஏறு சென்றடர்த்தவீச! பேசு” என்ற ஸம்போதந் ஸ்வாரஸ்யத்தால்- நீ சாஸ்த்ரத்துக்கு வசப்படாத ஜந்மத்திலே பிறந்து ஏழு கோ (ஹோ) ஹத்யை பண்ணச் செய்தேயும் ஈச்வரத்யம் நிறம் பெறநின்றாய்; ருத்ரன் தன் ஈச்வரத்வத்தால் வந்த மேன்மை குலையாமல் நிற்க செய்தேயும் பாதகியானான்; அந்தப் பாதகத்தை உனது திருவருளால் போக்கிக் கொண்டான்; இந்த நெடுவாசியை அறியவல்லாரார்; என்பதாக உட்கருத்துத் தோனறும்.
வேறு இசைந்த செக்கர் மேனி = எம்பெருமான் ஸர்வரக்ஷகனாயிருக்குந் தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கடல்போன்ற அழகிய வடிவம் அமைந்தால், சிவன் ஸர்வஸம்ஹாரகனாயிருக்குந்தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கோபாவேச ஸூசகமாய்ச் செந்நிறமான உடல் அமைந்ததாம். கபால்- ‘கபாலம்’ என்ற வடசொல்லின்குறை. எவ்வளவு ப்ரயாஸப்படும் அக்கபாலம் கையைவிட்டு நீங்காதிருந்ததனால் வன் கபால் எனப்பட்து.
English Translation
The Lord Siva has countenance of red hue, ashes and the mat; He wears a crescent-moon and bears a skull for begging bowl in hand. You filled the skull with lotus blood and rid him of his long despair. O Lord who battled seven bulls, pray tell me why you did this act?
