(793)

(793)

வேறிசைந்த செக்கர்மேனி நீரணிந்த புஞ்சடை

கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை

ஊறுசெங்கு ருதியால்நி றைத்தகார ணந்தனை

ஏறுசென்ற டர்த்தவீச பேசுகூச மின்றியே.

பதவுரை

கூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச

கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை!
வேறு

வேறாக
இசைக்க

ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான
செக்கர் மேனி

சிவந்த உடலையுடையனாய்
நீறு அணிந்த

பஸ்தாரியாய்
புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த

ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன்
கை வைத்த

தன்கையில் வைத்துக் கொண்டிருந்த
வல் கபால் மிசை

வலிதான கபாலத்தை
ஊறுசெம் குருதியால்

உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே
நிறைந்த காரணம்தனை

நிறைந்த காரணத்தை
பேசு

அருளிச் செய்யவேணும்.
பாட்டு

பாலினீர்மை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  “அரசுடைய கபாலத்தை நிறைந்தது எதற்காக? சொல்” என்று கேட்பதற்குக் கருத்து- நீ ஸர்வஸ்மாத்பரனாய் அவன் உன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவனாயிருக்கையாலே அவன் யாசிக்கவும் நீ அவனை அநுக்ரஹிக்கவும்  நேர்ந்ததென்று நாங்களெல்லாரும் நினைத்திருக்கிறாய்; இப்படி உனது பரத்வத்தை வெளியிடுதல் தவிர வேறு காரணமுண்டாகில் அருளிச்செய்யவேறும் என்கை.

“கூசமின்றியே பேசு” என்றாவது, “கூசமின்றியே ஏறு சென்றடர்த்தவீச!” என்றாவது அந்வயிக்கலாம். “ஏறு சென்றடர்த்தவீச! பேசு” என்ற ஸம்போதந் ஸ்வாரஸ்யத்தால்- நீ சாஸ்த்ரத்துக்கு வசப்படாத ஜந்மத்திலே பிறந்து ஏழு கோ (ஹோ) ஹத்யை பண்ணச் செய்தேயும் ஈச்வரத்யம் நிறம் பெறநின்றாய்; ருத்ரன் தன் ஈச்வரத்வத்தால் வந்த மேன்மை குலையாமல் நிற்க செய்தேயும் பாதகியானான்; அந்தப் பாதகத்தை உனது திருவருளால் போக்கிக் கொண்டான்; இந்த நெடுவாசியை அறியவல்லாரார்; என்பதாக உட்கருத்துத் தோனறும்.

வேறு இசைந்த செக்கர் மேனி = எம்பெருமான் ஸர்வரக்ஷகனாயிருக்குந் தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கடல்போன்ற அழகிய வடிவம் அமைந்தால், சிவன் ஸர்வஸம்ஹாரகனாயிருக்குந்தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கோபாவேச ஸூசகமாய்ச் செந்நிறமான உடல் அமைந்ததாம். கபால்- ‘கபாலம்’ என்ற வடசொல்லின்குறை. எவ்வளவு ப்ரயாஸப்படும் அக்கபாலம் கையைவிட்டு நீங்காதிருந்ததனால் வன் கபால் எனப்பட்து.

English Translation

The Lord Siva has countenance of red hue, ashes and the mat; He wears a crescent-moon and bears a skull for begging bowl in hand. You filled the skull with lotus blood and rid him of his long despair. O Lord who battled seven bulls, pray tell me why you did this act?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top