(52)

(52)

மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்

செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்

வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்

அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!

பதவுரை

மெய்

திருமேனியிலே
திமிரும்

பூசுகைக்குரிய
நானம் பொடியோடு

கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும்

மஞ்சள்பொடியையும்
செய்ய

சிவந்ததாய்
தட

விசாலமாயுள்ள
கண்ணுக்கு

கண்களில் (சாத்த)
அஞ்சனமும்

மையையும்,(திருனெற்றியில் சாத்துகைக்கு)
சிந்தூரமும்

ஸிந்தூரத்தையும்
வெய்ய கலை பாகி

கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள்
கொண்டு

எடுத்துக்கொடு வந்து
உவளாய் நின்றாள்

அதோ இராநின்றாள்;
ஐயா

ஸ்வாமியான கண்ணனே!
அழேழ் அழேழ் தாலேலோ;
அரங்கத்து

ஸ்ரீரங்கத்திலே
அணையானே

(திருவனந்தாழ்வானைப்) படுக்கையாகவுடையவனே!
தாலேலோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

-***துர்க்காதேவியானவள் வாசனைப்பொடி முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பிக்க வந்திருக்கிறாளென்று சொல்லித் தாலாட்டுகின்றாள்.  துர்க்கைக்கு மான் வாஹனமாகையால் கலைப்பாகி எனப்பட்டது.  ‘பாகன்’ என்பதன் பெண்பால் பாகி என்பது; மானின்மேல் ஏறிக்கொண்டு அதனைச் செலுத்துபவள்.  கலா என்ற வடசொல் ‘கலை’ என ஐயீறாகத்திரிந்ததென்று கொண்டு நூற்கலைகளை நடத்துகிற ஸரஸ்வதி என்று பொருள்கொள்வதும் ஏற்கும்; இப்பொருளில் வெய்ய என்பதற்கு-விரும்பப்படுகின்ற என்று பொருள்.  இத்திருமொழியில் முதற்பாட்டில் பிரதானனாகப் பிரமதேவன் சொல்லப்பட்டபடியால் அவனுக்குப் பத்தினியான ஸ்ரஸ்வதியை இப்பாட்டிற் சொல்லிமுடிக்கிறதென்று கொள்வது மிகவுமிணங்கும்.

English Translation

The deer-riding-goddess Parvati stands betwixt, with gifts of refreshing bath-fragrance and turmeric powder, collyrium for your large lotus eyes and vermillion power.  O, Sir don’t cry, don’t cry, Talelo.  Lord reclining on a serpent in Tiru-Arangam, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top