(51)

(51)

கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை

உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ

அச்சுத னுக்கென்று அவனியாள் போத்தந்தாள்

நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராய ணாஅழேல் தாலேலோ!!

பதவுரை

கச்சொடு

கச்சுப்பட்டையையும்
பொன்

பொன்னாற்செய்த
சுரிகை

உடைவாளையும்
காம்பு

கரைகட்டிய சேலையையும்
கனம்

கநகமயமான
வளை

தோள்வளைகளையும்
மணி

ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய்
உச்சி

உச்சியிலே சாத்தத்தக்கதான
சுட்டி

சுட்டியையும்
ஒள் தாள்

அழகிய காம்புகளையுடைத்தாய்
நிரை

ஒழுங்கான
பொற்பூ

பொற்பூவையும்
அச்சுதனுக்கு என்று

‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று
அவனியாள்

பூமிப்பிராட்டியானவள்
போத்தந்தாள்

அனுப்பினாள்;
நஞ்சு

விஷமேற்றின
முலை

பூதனையின் முலையின் பாலை
உண்டாய்

உண்ட கண்ணனே!

தாலேலோ;

நாராயணா! அழேல்! தாலேலோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ஸ்ரீ பூமிப்பிராட்டியார் சில ஆபரணங்களையும் ஆடையையும் கொடுத்தனுப்பினதைச் சொல்லித் தாலாட்டுகிறாள்.  அச்சுதனுக்கு என்றது முன்னிலைப் படர்க்கை;  அச்சுதனானவுனக்கு என்றவாறு.  அவநி- வடசொல்; பூமி.  ’ஷூரிகா’ என்ற வடசொல் சுரிகையெனத் திரிந்தது; கத்தி. . . .

English Translation

Goddess Earth has sent a golden diaper pin, golden bangles, a jewel-studded forehead pendant, and a hairpin with flowers of gold marked, ‘For Achyuta’.  O, Child who sucked the poisoned breast, Talelo.  Narayana, don’t cry, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top