(461)
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்ய லுற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச்சக் கரமதனால்
தென்றித் திசைதிசை வீழச்செற்றாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.
பதவுரை
அங்க |
– |
சோணித புரத்திற்கு |
சென்று |
– |
எழுந்தருளி |
வாணனை |
– |
பாணாஸுரனுடைய |
ஆயிரம் தோளும் |
– |
ஆயிரந் தோள்களும் |
திசை திசை |
– |
திக்குகள்தோறும் |
தென்றி வீழ |
– |
சிதறி விழும்படி |
திருச் சக்கரம் அதனால் |
– |
சக்ராயுதத்தினால் |
செற்றாய் |
– |
நெருக்கியருளினவனே! |
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்! |
||
வயிற்றில் கிடந்திருந்து அன்றே |
– |
கர்ப்பவாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே |
அடிமை கெய்யல் |
– |
(உனக்கக்) கைங்கரியம் பண்ணுவதில் |
உற்றிருப்பன் |
– |
அபிநிவேசங் கொண்டிருந்த நான் |
இன்று |
– |
இப்போது |
இங்கு வந்து |
– |
இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து |
உன்னை |
– |
(அனைவர்க்கம் எளியனான) உன்னை |
கண்டு கொண்டேன் |
– |
ஸேவித்துக் கொண்டேன்; |
இனி போக விடுவது உண்டே:. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பத்நீஸம்ச்லேஷத்தில் வேண்டினவடி பாரித்துக்கொண்டிருந்த பிரமசாரி, பின்னை அவளைப்பெற்றால் ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரிய மாட்டாதாப்போல,) அடியேன் கர்ப்பவாஸம் பண்ணிக்கொண்டிருந்தபோதே உனக்குப்பணி செய்யவேணுமென்று பேரவாக்கொண்டிருந்து, பிறந்தபின்பு நெடுநாள் ஸம்ஸாரத்தி வீடுபாட்டால் உன் அனுபவத்தை இழந்திருந்து-, விஷயாந்தரபரனாய்க் கண்டவிடங்களிலுந் தட்டித் திரிந்துகொண்டு வரும்போது தைவவசமாக இன்ற இத்திருமாலிருஞ்சோலையைக் கிட்டி இங்க உன்னைக் காணப்பெற்ற பின்பு இனி விட்டுக் பிரியமாட்டே னென்கிறார். அடிமை செய்யல் உற்றிருப்பன் – கைங்கரியமே புருஷார்த்தம் என்று துணிந்திருந்தேன் என்றபடி. ‘ அன்றே அடிமை செய்யலுற்றிருப்பன்’ என்றதனால், இன்று அடிமைசெய்ய விரும்புவதில் ஸம்சயலேசமுமில்லையென்பது போதரும்.
English Translation
Even when I was in the womb, I had the desire to serve you; today I have come here and found you, how can I let you go? With your discus you cut asunder the thousand arms of Bana and scattered them far and wide. O Lord of Tirumalirumsolai, O My Master!