(462)

(462)

சென்றுல கம்குடைந் தாடும் சுனைத்திரு மாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான்அடி மேல்அடி மைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய்

பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன்

ஒன்றினோ டொன்பதும் பாடவல்லார் உல கமளந் தான்தமரே.

பதவுரை

உலகம்

உலகத்தாரெல்லாரும்
சென்று

(தங்கள் தங்களிருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து

அவகரஹித்து
ஆடும்

நீராடா நிற்கப்பெற்ற
சுனை

தீர்த்தங்களையுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்

திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்

எழுந்தருளியிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்

திருவடிகள்
அடிமைத்திறம்

கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்

ஸ்வர்ணமயமாய் விளங்கா நின்ற
மாடம்

மாடங்களினால்
பொலிந்து தோன்றும்

நிறைந்து விளங்கா நின்ற
புதுவை

ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்

தலைவரான
விட்டு சித்தன்

பெரியாழ்வார்
நேர்பட

பொருந்தும்படி
விண்ணப்பம் செய்

அருளிச்செய்த
ஒன்றினோடு ஒன்பதும்

இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்

பாடவல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்

திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் இப்பாட்டால். இத்திருமொழியில், “இனிப்போக விடுவதுண்டே” “இனிப்போகலொட்டேன். “ஒளித்திடில் நின்திருவாணைக்கண்டாய்” என்றிப்புடைகளிலே பல சொல்லித்தடுப்பது வளைப்பதாயிருந்தது – ‘நமது கைங்கரியங்களை எம்பெருமான் உடனிருந்து கொள்ளவேணும்’ என்ற விருப்பத்தினாலாதலால், “அடிமைத்திறம் …. விண்ணப்பஞ்செய்” எனப்பட்டது. தன்னடையே வருகைக்கும் நேர்பாடு என்று பெயராதலால், நேர்பட என்பதற்கு, தன்னடையே என்றும் பொருள் கொள்ளலாமென்பர்; ஆயாஸமில்லாம லென்றபடி. ***-***-***-***- என்றார்போல் …     (க)

English Translation

The whole world goes to Tirumalirumsolai on pilgrimagem to take a holy dip in its waters. At the feet of the Lord who stands there, this decad of songs is dedicated as a sincere prayer by Vishnuchitta, king of Puduvai town of mansions gleaming with gold. Those who master it will become agents of the Lord who measured the Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top