(457)
காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிகுரல்
மேலு மெழாமயிர்க் கூச்சுமறாஎன தோள்களும் வீழ்வொழியா
மாலுக ளாநிற்கும் என்மன னேஉன்னை வாழத் தலைப்பெய்திட்டேன்
சேலுக ளாநிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
பதவுரை
சேல் |
– |
மீன்களானவை |
உகளா நிற்கும் |
– |
துள்ளி விளையாடுதற்கு இடமான |
நீள் சுனை சூழ் |
– |
பெரிய தடாகங்களாலே சூழப்பெற்ற |
என |
– |
என்னுடைய |
காலும் |
– |
கால்களும் |
ஏழா |
– |
(வைத்து விடத்தைவிட்டுப்) போகின்றனவில்லை; |
கண்ணநீரும் |
– |
கண்ணீரும் |
நில்லா |
– |
உள்ளே தங்குகின்றனவில்லை. |
உடல் |
– |
சரீரமானது |
சோர்ந்து நடுங்கி |
– |
கட்டுக்குலைந்து நடுங்கியதனால் |
குரலும் |
– |
குரலும் |
மேல் எழா |
– |
கிளம்புகின்றதில்லை; |
மயிர் கூச்சும் அறா |
– |
மயிர்க்கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை; |
திருமாலிருஞ்சோலை |
– |
திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) |
எந்தாய் |
– |
எம்பெருமானே! |
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்) |
||
தோள்களும் |
– |
தோள்களும் |
வீழ்வு ஒழியா |
– |
விழுந்துபோவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்யமுடியாமல் விழுந்தொழிந்தன); |
என் மனம் |
– |
எனது நெஞ்சானது |
மால் உகளா நிற்கும் |
– |
வியாமேரஹத்தை அடைந்திரா நின்றது; |
(இப்படிகளால்) |
||
வாழ |
– |
வாழ்வுறும்படி |
உன்னை |
– |
உன்னை |
தலைப்பெய்திட்டேன் |
– |
சேர்ந்துவிட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் அவகாஹிக்க வேணுமென்ற நெஞ்சில் நினைத்தபோதே “காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்றபடி ஸர்வேந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்குமாதலால், அப்படிப்பட்ட நிலைமை எம்பெருமானருளால் தமக்கு வாய்த்தபடியைக் கூறுகிறார், மூன்றடிகளால்; வைத்த அடியை எடுத்துவைத்து நடக்கத் தொடங்கினால், கால் கிளம்புகின்றதில்லை; ஆநந்த பாஷ்பம் இடைவிடாது பெருகாநின்றது; சரீரம் கட்டழிந்து நடுங்காநின்றமையால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச முடியவில்லை; மயிர்க்கூச்சு ஓய்கிறதில்லை; (உன்னைத் தோளாலணைப்போமென்று பார்த்தால்,) தோள்கள் ஒரு வியாபாரம் பண்ணவும் வல்லமையற்றுச் சோர்வையடைந்தன; நெஞ்சு பிச்சேறிக்கிடக்கிறது.
வீழ்வொழியா என்பதற்கு “நிர்விகாரமாய்” என்றிவ்வளவே பெரிய வாச்சான்பிள்ளை பொருளுரைத்தக்கதாக அச்சுப்பிரதிகளிற் காண்கிறது; அது பொருத்தமற்றது; “நிர்வ்யாபாரமாம்” என்றிருந்ததை, “நிர்விகாரமாய்” எனமயங்கி அச்சிடுவித்தனர் போலும். வீழ்வு-சோர்வு; அது ஒழியாமையாவது -எப்போதும் சோர்வுற்றிருக்கை. அதாகிறது – நிர்வ்யாபாரத்வம். இனி “நிர்விகாரமாம்” என்ற அச்சுப்பிரதிப்பாடத்தை, “நிர்விகாரமாம்”எனத்திருத்திக்கொண்டு, “நிர்வ்யாபாரமாம்” என்ற பாடத்தின் பொருளையே அதற்குக் கொள்ளுதல் பொருந்துமென்னவுமாம். மனமே என்றவிடத்து, ஏகாரம் இசைநிறை.
English Translation
Long stretches have I roamed and floundered with neither shade nor water anywhere. No haven have I found, other than the shadow of your feet. O Lord of Tirumalirumsolai, you went as an emissary of the Pandavas, then spoke a few lies and kindles differences, and stacked corpses in the battle field everywhere, O My Master.