(44)

(44)

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!

பதவுரை

மாணிக்கம்

மாணிக்கத்தை
கட்டி

(இரண்டருகும்) கட்டியும்
இடை

நடுவில்
வயிரம்

வயிரத்தை
கட்டி

கட்டியும்
ஆணிப் பொன்னால்

மாற்றுயர்ந்த பொன்னால்
செய்த

செய்யப்பட்ட
வண்ணம்

அழகிய
சிறு தொட்டில்

சிறிய தொட்டிலை
பிரமன்

சதுர்முகனானவன்
பேணி

விரும்பி
உனக்கு

உனக்கு
விடுதந்தான்

அனுப்பினான்
மாணி குறளனே

ப்ரஹம்சாரிவாமநாவதாரம் பண்ணின கண்ணனே!

தாலேலோ!

வையம்

உலகங்களை
அளந்தானே

(த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே!

தாலேலோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** –  திவ்யமான தொட்டிலைப் பிரமன் கொணர்ந்து ஸமர்ப்பித்தானென்கிறாள்.

மாணிக்கம்     –  நவரத்நங்களுள் ஒன்று : இது செந்நிறம் உடையது; (நூல்களில் கருமாணிக்கமெனவருதல் இல்பொருளுவமையாம்).  ஆணிப்பொன் – மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்கு மேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்தபொன் என்றுரைப்பர்.  தால் ஏல் ஓ= தால் – ‘தாலு’ என்ற வட சொல் விகாரம், தாடையென்றுபொருள்; ஏலே ஓ=அசைச்சொற்கள்; குழந்தைகளைத் தொட்டிலிவிட்டுப் பெண்கள் ‘உளு உளு உளு ஆயீஇ! என்று உள்தாடையை நாவாலே ஒலித்துச் சீராட்டுதலைத் ‘தாலேலோ’ என்று வழங்குதல் மரபு.  மாணிக்கம், வயிரம், வண்ணம், பிரமன் – வட சொல் விகாரங்கள்.

English Translation

O, Naked manikin, Talelo,–Brahma has sent you this little golden cradle studded with rubles and diamonds, –You measured the Earth, Talelo.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top