(44)
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
பதவுரை
| மாணிக்கம் |
– |
மாணிக்கத்தை |
| கட்டி |
– |
(இரண்டருகும்) கட்டியும் |
| இடை |
– |
நடுவில் |
| வயிரம் |
– |
வயிரத்தை |
| கட்டி |
– |
கட்டியும் |
| ஆணிப் பொன்னால் |
– |
மாற்றுயர்ந்த பொன்னால் |
| செய்த |
– |
செய்யப்பட்ட |
| வண்ணம் |
– |
அழகிய |
| சிறு தொட்டில் |
– |
சிறிய தொட்டிலை |
| பிரமன் |
– |
சதுர்முகனானவன் |
| பேணி |
– |
விரும்பி |
| உனக்கு |
– |
உனக்கு |
| விடுதந்தான் |
– |
அனுப்பினான் |
| மாணி குறளனே |
– |
ப்ரஹம்சாரிவாமநாவதாரம் பண்ணின கண்ணனே! |
|
தாலேலோ! |
||
| வையம் |
– |
உலகங்களை |
| அளந்தானே |
– |
(த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே! |
|
தாலேலோ! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – திவ்யமான தொட்டிலைப் பிரமன் கொணர்ந்து ஸமர்ப்பித்தானென்கிறாள்.
மாணிக்கம் – நவரத்நங்களுள் ஒன்று : இது செந்நிறம் உடையது; (நூல்களில் கருமாணிக்கமெனவருதல் இல்பொருளுவமையாம்). ஆணிப்பொன் – மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்கு மேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்தபொன் என்றுரைப்பர். தால் ஏல் ஓ= தால் – ‘தாலு’ என்ற வட சொல் விகாரம், தாடையென்றுபொருள்; ஏலே ஓ=அசைச்சொற்கள்; குழந்தைகளைத் தொட்டிலிவிட்டுப் பெண்கள் ‘உளு உளு உளு ஆயீஇ! என்று உள்தாடையை நாவாலே ஒலித்துச் சீராட்டுதலைத் ‘தாலேலோ’ என்று வழங்குதல் மரபு. மாணிக்கம், வயிரம், வண்ணம், பிரமன் – வட சொல் விகாரங்கள்.
English Translation
O, Naked manikin, Talelo,–Brahma has sent you this little golden cradle studded with rubles and diamonds, –You measured the Earth, Talelo.
