(37)

(37)

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்

நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்

மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே.

பதவுரை

அசோதை

யசோதைப்பிராட்டி
நோக்கி

(கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய

அரைத்த
மஞ்சளால்

மஞ்சட்காப்பாலே,

நாக்குவழித்து – ;

நீராட்டும்

ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு

இக்கண்ணபிரானுடைய
வாக்கும்

திருவாக்கும்
நயனமும்

திருக்கண்களும்
வாயும்

அதரஸ்புரணமும்
முறுவலும்

புன்சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ

மூக்குமிருந்தபடியை

காணீர்!

மொய்குழலீர்

செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து

காணீர்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்தை யறியும் யசோதையானவன் தான் அத்திருமேனிக்குத் தகுதியாக அரைத்த மஞ்சட் காப்பாலே நாக்கை வழித்துத் திருமஞ்சனஞ் செய்யும்படி அடங்கியிருப்பன் கண்ணன்; அவனுடைய வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருக்கிறப்படியைப் பாருங்களென்கிறது.  வாக்கு என்றது –  தாய், தந்தை முதலானாருடைய நாமங்களைச் சொல்லுகிற வாகிந்திரியத்தைச் சொன்னபடி.  வாயும் என்றது அதரத்தைச் சொன்னபடி.  இனி, வாயும் என்பதை முறுவலுக்கு விசேஷணமாக்கி, வாய்த்திருக்கின்ற புன்சிரிப்பு என்று உரைக்கலாம் என்றான் ஒரு தமிழன்.

English Translation

O Ladies with dense coiffure, come here and see.  With freshly ground turmeric, Yasoda carefully bathes the child and cleans his tongue.  See his eyes, nose, mouth and smile.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top