(411)
பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை
செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு
இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே.
பதவுரை
| பருவரங்கள் அளை பற்றி |
– |
பிரமன் முதலியோரிடத்துப்பெற்ற பெரியவரங்களைப் பலமாகக் கொண்டு |
| படை ஆலித்து எழுந்தானை |
– |
யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப்புறப்பட்ட இராவணனை |
| செரு |
– |
யுத்தத்திலே |
| அரங்க |
– |
ஒழியும்படி |
| பொருது |
– |
போர் செய்து |
| அழித்த |
– |
ஒழித்தருளின |
| திருஆளகர் |
– |
(வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய |
| திருப்பதி மேல் |
– |
(திருவங்கமென்னும்) திருப்பதிவிஷமாக |
| விட்டுசித்தன் |
– |
பெரியாழ்வார் |
| விரித்தன |
– |
அருளிச்செய்த |
| திரு அரங்கம் தமிழ் மாலைகொண்டு |
– |
(பாட்டுத்தோறம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையுங்கொண்டு. |
| இருவர் அங்கம் மெரித்தானை |
– |
(மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத் (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை |
| எத்தவல்லார் |
– |
துதிக்கவல்லவர்களுக்கு |
| அடியோம் |
– |
அடிமை செய்யக்கடவோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “தீதிலாத வொண்டமிழ்க ளிவையிரத்துளிப்பத்தும், ஓத வல்லபிராக்கள் நம்மை ஆளுமையார்கள் பண்டே” என்று- தம் அருளிச்செயலைக் கற்பார்க்குத் தாம் அடிமைசெய்வதாக அருளிச்செய்த நம்மாழ்வாரைப்போல, இவ்வாழ்வாரும் இப்பத்தையும் ‘கற்பார்க்கு’ அடிமை செய்யப்பெறுவோம் யாமென்கிறார்.
வரங்கள் அவை = அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு படை என்று சேனைக்கும் பெயர். யுத்தத்துக்குப் பெயர். ஆலிப்பு- கோலாஹலம். அரங்கல் – அழிதல். (இருவரங்கமேரித்தானை.) “ஏய்ந்த பணக்கதிரமேல் வெவ்வுயிர்ப்ப- வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்” என்றது காண்க. தமிழ் மாலை கொண்டு வந்தவல்லார்” என இபையும் .. … .. (க0)
English Translation
This decad of songs by Vishnuchitta sings of Tiru-Arangam the abode of the auspicious Lord who destroyed the boon-intoxicated Ravana and the twin Rakshasas Madhu-Kaitabha with his discus. Those who master in are our masters.
