(411)

(411)

பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை

செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்

திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு

இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே.

பதவுரை

பருவரங்கள் அளை பற்றி

பிரமன் முதலியோரிடத்துப்பெற்ற பெரியவரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை

யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப்புறப்பட்ட இராவணனை
செரு

யுத்தத்திலே
அரங்க

ஒழியும்படி
பொருது

போர் செய்து
அழித்த

ஒழித்தருளின
திருஆளகர்

(வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்

(திருவங்கமென்னும்) திருப்பதிவிஷமாக
விட்டுசித்தன்

பெரியாழ்வார்
விரித்தன

அருளிச்செய்த
திரு அரங்கம் தமிழ் மாலைகொண்டு

(பாட்டுத்தோறம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை

(மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத்  (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
எத்தவல்லார்

துதிக்கவல்லவர்களுக்கு
அடியோம்

அடிமை செய்யக்கடவோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தீதிலாத வொண்டமிழ்க ளிவையிரத்துளிப்பத்தும், ஓத வல்லபிராக்கள் நம்மை ஆளுமையார்கள் பண்டே” என்று- தம் அருளிச்செயலைக் கற்பார்க்குத் தாம் அடிமைசெய்வதாக அருளிச்செய்த நம்மாழ்வாரைப்போல, இவ்வாழ்வாரும் இப்பத்தையும் ‘கற்பார்க்கு’ அடிமை செய்யப்பெறுவோம் யாமென்கிறார்.

வரங்கள் அவை = அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு படை என்று சேனைக்கும் பெயர். யுத்தத்துக்குப் பெயர். ஆலிப்பு- கோலாஹலம். அரங்கல் – அழிதல். (இருவரங்கமேரித்தானை.) “ஏய்ந்த பணக்கதிரமேல் வெவ்வுயிர்ப்ப- வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்” என்றது காண்க. தமிழ் மாலை கொண்டு வந்தவல்லார்” என இபையும்    ..    …    .. (க0)

English Translation

This decad of songs by Vishnuchitta sings of Tiru-Arangam the abode of the auspicious Lord who destroyed the boon-intoxicated Ravana and the twin Rakshasas Madhu-Kaitabha with his discus. Those who master in are our masters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top