(3408)

(3408)

அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்

உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்

எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,

திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,

சங்கு சக்கரத் தாய்! தமியேனுக் கருளாயே.

 

பதவுரை

இலங்கை

லங்காபுரியை

செத்த

தொலைத்த

அம்மானே

ஸ்வாமியே!

திங்கள் சேர்

சந்திரனையும் சேர்ந்திருக்கிற

மணிமாடம்

மணி மயமான மாடங்களையுடைத்தாய்

நீடு

விசாலமான திருவீதிகளையுடைந்தாயிருக்கிற

கிரீவரமங்கலம் நகர் உறை

கிரீவரமங்கையிலே நித்யவாஸம் செய்தருளுகிற

சங்கு சக்கரத்தாய்

சங்கு சக்கரபாணியான ஸர்வேச்வரனே

நான்

அடியேன்

அங்குந்தேன் அல்லேன்

நித்யஸேவை பண்ணுகிற நித்யஸூரிகளிலே சேர்ந்தவனல்லேன்.

இங்குர்றேன் அல்லேன்

உன்னைக் கனவிலுமறியாத ஸம்ஸாரிகள் படியுமுடையேனல்லேன்

உன்னை காணும் அவாவில் வீழ்ந்து

உன்னைக் காணவேணுமென்கிற ஆசையில் படிந்தவானி

எங்குற்றேனும் அல்லேன்

ஒருவர் படியிலும் சேராதவனாயிரா நின்றேன்;

தமியேனுனக்கு

இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே

அருளாய்

அருள்புரியவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அங்குற்றேனல்லேன்) பரமபத்திலுள்ளாரில் சேர்ந்தவனல்லேன். இந்நிலத்திலுள்ளாரிலும் சேர்ந்தவனல்லேன் என்கிறவிதற்குக் கருத்து என்னென்னில்; பரமபதத்திலுள்ள நித்யமுக்தர்கள் க்ருதக்ருத்யர்களாய்ப் பலன் கைபுகுந்தவர்களாகையாலே அன்னவர்களது வகுப்பிலே நான் சேர்ந்தவனல்லேன்; தம் தலையாலே ஸாதநாநுஷ்டகம் பண்ணிக்கிடக்கிற இந்நிலத்திலுள்ளார் வகுப்பிலும் சேர்ந்தவனல்லேன்.

இதுவரையிலும் ஒரு ஸாதனமும் அனுட்டியாமற் போனாலும் இனிமேலாவது ஸாதநாதுஷ்டானம் பண்ண யோக்யதையுண்டன்றோ என்னில்; (உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமல்லேன்) மேலும் ஸாதாரநுஷ்டானம் பண்ணவொண்ணாதபடி வடிவழகு முதலானவற்றிலே விடுபட்டு உன்னைக் காணவேணுமென்னும் ஆசையாலே தளர்ந்து கிடக்கிறேனாகையாலே எவ்விதமான உபாயத்தையும் அநுஷ்டிக்க க்ஷமனல்லேன் என்கை.

நீ இருக்குமிடத்தே வந்து கிட்டி உன்னை அநுபவிக்கிறவனல்லேன்; உன்னை ஒரு பொருளாகவே மதியாத ஸம்ஸாரிகளின் திரளிலே சேர்ந்தவனுமல்லேன்; உன்னையொழியவும் தரித்திருக்கிறவர்களின் திரளிலும் சேர்ந்தவனல்லேன் என்றுமாம்.

இலங்கை செற்ற அம்மானே! = இலங்கையைக் கிழங்கெடுத்து வுனக்கு என் வரையில் இந்த ஸம்ஸாரத்தைக் கிழங்கெடுத்தல் அரிதோ? என்றவாறு.

(திங்கள் சேர் இத்யாதி.) சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மணிமாடங்களையுடைய கிரீவரமங்கல நகரிலே திருவாழி திருச்சங்குடனே ஸேவைஸாதிக்கும் பெருமானே! துணைற்றவெனக்கு உறுதுணையாயிருந்து அருள் செய்தருளவேணும் என்றாராயிற்று.

 

English Translation

O Lord who destroyed Lanka, I am neither here nor here.  Fallen in the desire to see you, I stand nowhere.  O Lord of discus and conch residing in Srivaramanagala-nagar, -where the moon caresses fall mansions, -pray grace this forlorn self.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top