(3317)
உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்,
கிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த,
தடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும்,
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.
பதவுரை
|
உடம்பினால் குறைவு இல்லா |
– |
பெரிவுடம்பு படைத்த |
|
அசுரர் குழாம் |
– |
அசுரக்சுட்டங்களை |
|
உயிர் பிரிந்த மலை துண்டம் கிடந்தனபோல் |
– |
உயிரைவிட்டு நீங்கின பர்வதகண்டங்கள் கிடந்காற்போலே |
|
பல துணி ஆ |
– |
பலபல கண்டங்களாம்படி |
|
துணித்து |
– |
துண்டித்து |
|
உகந்த |
– |
(ஆச்ரிதவிரோதிகள் தொலைந்தன வென்று) திருவுள்ள முவந்தவானாய், ஒரு பக்கத்திலே, |
|
தடம் புனல் சடை முடியன் தனி அமர்ந்து உறையும் |
– |
பரந்த கங்காதீர்த்தத்தைத்தரித்த ஜடாமகுடத்தையுடையனான சிவபிரான் பொருந்தி வாஸம் பண்ணப்பெற்ற |
|
உடம்பு உடையான் |
– |
திருமேனியை யுடைவனான எம்பெருமான் |
|
கவராத |
– |
விரும்பாத |
|
உயிரினால் குறைவு இலம் |
– |
ஆத்மாவில் அபேக்ஷையுடையோ மல்லோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (உடம்பினால் குறைவில்லா.) முன்னடிகளால் எம்பெருமானுடைய விரோதி நிரஸந ஸாமர்ததியம் பேசப்படுகிறது. “உடம்பினால் குறைவில்லா” என்கிற அடைமொழி அசுரர்குழாத்திலே அந்வயிக்கும். “ஊன்மல்கிமோடு பருப்பார்” என்கிறபடி கண்ட பொருள்களையும் தின்று உடம்பை வளர்த்திருப்பர்கள் அசுரர்கள். ஆத்மாவைப் போஷியாதே தேஹபோஷணத்திலேயே நோக்குடையவர்கள் என்றபடி.
பண்டொருகாலத்தில் மலைகளெல்லாம் இறகுகளோடு கூடி வானத்திலெழுந்துதிரிந்து நாடுநரங்களுக்கு விநாசங்களை விளைத்திட்டனவென்றும், அப்போது தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அம்மலைகளின் இறகுகளைத் துணித்து வீழ்த்தனன் என்றும் இதிஹாஸங்கள் கூறும். எம்பெருமானால் துணித்து வீழ்த்தப்பட்ட அசுரர்கள் அம்மலைக்களோடு ஒப்பிடத்தக்கவர்களெனக் கொண்டு “உயிர்பித்த மலைத்துண்டம் கிடந்தனபோல்” எனப்பட்டது. “ஸப்ராணனாய்க்கொண்டு ஸஞ்சரித்த பர்வதங்கள் இந்த்ரன் கையில் வஜ்ராயுகத்திலே பல கூறும்படி துணியுண்டு கிடந்தாப்போலே அஸூரவர்க்கத்தைப்பல கூறாம்படி துணித்துகந்தானாயிற்று” என்பது நம்பிள்ளையீடு.
தடம்புனால்சடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையு முடம்புடையான்=தன்னுடைய சேஷத்வத்தைச் சிலகாலங்களிலே மறந்து தன்னையே சச்வரனாத அபிமானிக்கும் குர்மானியான ருத்ரனுக்கும் உடம்புகொடுக்குமெம்பெருமான் எனக்கு உடம்பு கொடுத்தில்னென்றால் பின்னை இந்த உயிர் எனக்கு எதுக்கு? என்கிறார். “உயிரினால் குறைவிலம்” என்றது இந்த ஆத்மா தொலைந்து போகட்டுமென்றபடி. நித்யமான ஆத்மவஸ்து எங்ஙனே தொலைந்து போகுமென்று குசோத்யம் செய்யவேண்டர் எம்பெருமானுடைய விருப்பத்திற்கு உடலாவதே ஆத்மாவுக்குச் சிறந்த ஸ்வரூபம் என்று காட்டினபடி. ஆசார்ய ஹ்ருதயத்தில் ‘சேஷத்வ பஹர்ப்பூதஜ்ஞாநந்தமயனையும் ஸஹியாதார் த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே” என்ற நளிச்செய்த ஸ்ரீஸூக்தியும், மமகூஸப்படியில் “உயிரினால் குறைவிலமென்கிறபடியே த்யாஜ்யம்” என்றருளிச்செய்த ஸ்ரீஸூக்தியும் இங்கு உணரத்தக்கன.
English Translation
With great relish the cut to pieces many huge-bodies Asuras by the clan, and laid them like lifeless rocks; the mat-hair Siva with the torrential Ganga reigns in solitude on his right side. If he does not desire my life, we have nothing to lose
