(3139)

(3139)

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,

ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,

பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,

கூவுகின்றேன் காண்பான் எங்கொய்தக் கூவுவனே?

 

பதவுரை

துன்பம் மேவு

பலவகைத் துயரங்களை விளைக்கவல்ல

வினைகளை

பாவங்களை

ஓவுதல் இன்றி

இடையறாமல்

உன் கழல்

உனது திருவடிகளை

வணங்கிற்றிலேன்

பணிவதும் செய்திலேன்

பாவு

எங்கும் பரவிய

தொல்

இயற்கையான

சீர்

திருக்குணங்களையுடைய

விடுத்தும் இலேன்

(தவன் முதலியவற்றால்) போக்கடித்துக்ö காண்டேனுமில்லை

கண்ணா

கண்ணபிரானே!

என்

எனது விருப்பத்திற்குரிய

பாஞ்சுடரே

மேலான ஒளியுருவனே!

காண்பான்

(உன்னைக்) காணும்பொருட்டு

கூவுகின்றேன்

கூப்பிடுகின்றேன்.

எங்கு எய்த கூவுவன்

எங்கே கிட்டுவதாகக் கூப்பிடுவேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானே! உன்னைப் பெறுகைக்கு நான் ஏதேனும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணியிருந்தேனாகில் அந்தப் பற்றாசுதன்னை வைத்துக் கொண்டாவது ‘ஏன் நமக்கு இன்னமும் இரங்கி யருளவில்லை?’ என்று நான் கரைந்து கூப்பிடலாம்; நானோ ஒரு ஸாதாநாநுஷ்டாநமும் பண்ணாதவன்; அப்படியிருந்தும், ஸாதநங்களை நிறைய அநுஷ்டித்துப் பலன் கைபுகப் பெறாதவன் கிடந்து துடிக்குமாபோலே நானும் துடித்துக் கதறுகின்றேனே! இது என்ன! என்று தமக்குத்தாமே விஸ்மயப் பட்டுக் கொள்ளுகிறார்.

மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன் = நாம் செய்கிற தீவினைகளை நல்வினைகளினால் போக்கிக் கொள்ள வேணுமென்பது நூற்கொள்கை; நானோ பாவங்களை மாத்திரஞ் செய்தேனேயன்றி அவற்றைப் போக்கவல்ல நற்கிரிசை யொன்றுஞ் செய்திலேன். எள்ளில் எண்ணெய்போலவும், கட்டையில் நெருப்புப் போலவும், இவ்வாத்மாவோடு பிரிக்க முடியாதபடி பொருந்தியிருப்பனவும் பலபல துன்பங்களை வினைப்பனவுமான பாபங்களை விஹிதகர்மாநுஷ்டானத்தாலே போக்கிக் கொண்டேனில்லை.

ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன் = உன் திருவடிகளை நிரந்தரமாக பஜிப்பதும் செய்திலேன் என்கிறார். முதலடியினாலேயே இவ்வர்ததம் ஏற்பட்டுவிட்டாலும் ஆழ்வார் தம் ஆர்த்தியின் கனத்தினால் விவரித்துக் கூறுகிறாரென்று கொள்க. இங்கு ஓவுதலின்றி என்பதை மத்யமதீபமாகக்கொண்டு முதலடியோடும் இரண்டாமடியோடும் கூட்டி நிர்வஹிப்பர் எம்பார்; இப்போது, ஓவுதலின்றி என்பதற்கு ஓய்வு இல்லாமையினாலே என்று பொருள். எனக்குள்ள அவகாசமெல்லாம் தீவினைகளைச் செய்வதற்கே சரிப்பட்டுப்போயின; ஒரு நல்வினை செய்யவும் அவகாசம் கிடைக்கவில்லை; ஆதலால்- என்றபடி. “கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவஸரமில்லை என்னுமாபோலே இந்த்ரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் ஹிதம் பார்த்திலேன்” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தி பரமபோக்யம்.

பரவு தொல் சீக்க்கண்ணா!- நான் அயோக்யனாயிருந்தாலும் உனது திருக்குணங்களை நினைக்குங்கால் மேல் விழுந்தாகிலும் புஜிக்கவேண்டும்படியிரா நின்றதே! விட முடியவில்லையே! என் செய்வேன்! என்கிற ஆர்த்தி சொல்வடிவத்திலே தோன்றுமாறு காண்க. பாவுதல்- பரவுதல்; பக்தர்களின் கோஷ்டிகளில் மாத்திரமன்று; சத்ருக்களின் கோஷ்டிகளிலும் பரவிய புகழ்படைத்தவனென்பர்.

 

English Translation

O Lord Krishna, my eternal glory-flood!  Alas, I have not ceased my lowly Karmas not relentlessly worshipped your lotus feet, “Krishna”, I call, O where can I see you?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top