(3102)
எனக்கே யாட்செய் யெக்காலத்து மென்று,என்
மனக்கே வந்திடை வீடின்றி மன்னி,
தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே,
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.
பதவுரை
|
எக்காலத்தும் |
– |
எக்காலத்திலும் |
|
எனக்கே ஆள் செய் என்று |
– |
‘எனக்கே அடிமை செய்யக் கடவாய்’ என்று சொல்லி |
|
என் மனக்கே வந்து |
– |
எனது மனத்திலேயே எழுந்தருளி |
|
இடை வீடு இன்றி |
– |
இடைவிடாமல் |
|
மன்னி |
– |
நிலைபெற்றிருந்து |
|
தனக்கே ஆக |
– |
தனக்கே உரியேனாம் படி |
|
எனை |
– |
என்னை |
|
கொள்ளும் ஈதே |
– |
அங்கீகாரித்தருளுமிதுவே |
|
எனக்கே |
– |
என் ஸ்வரூபத்திற்குத் தகுதியாக |
|
கண்ணனை |
– |
எம்பெருமானிடத்து |
|
யான் கொள் |
– |
நான் விரும்புகின்ற |
|
சிறப்பு |
– |
சிறந்த பிரயோஜனம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருவாய்மொழிக்கு உயிரான பாசுரம் இது. எல்லாப்படியாலும் அத்தலைக்கே உரித்தாயிருக்கும்படியான அத்யந்த பாரதந்திரியத்தை ப்ரயோஜனமாக நிஷ்கர்ஷிக்கிறாரிதில். இப்பாசுரத்திற்கு அவதாரிகை அருளிச் செய்யா நின்ற நம்பிள்ளை-“எம்மாவீட்டி லெம்மாவீடாய், வைஷ்ணவ ஸர்வஸ்வமுமாய், உபநிஷத் குஹ்யமுமாய் ஸர்வேச்வரன் பக்கலிலே அபேக்ஷித்துப் பெறுமதாய், இவ்வாத்மாவுக்கு வகுத்ததான பாரதந்த்ரியத்தை அவன் பக்கலிலே அபேக்ஷிக்கிறார்” என்கிறார். இதில் எம்மா வீட்டி லெம்மா வீடு என்றது அற்புதமான வோரு ஸ்ரீஸூக்தியாகும். திருவாய்மொழியாயிரத்தினுள்ளே எம்மாவீடு என்கிற இப்பதிகம் மிகச் சிறந்தது, என்று ஆசார்ய கோஷ்டியில் ப்ரஸித்தியாதலால், எம்மாவீடு என்கிற பதத்திற்கு நிரூட லக்ஷணையால் ஸாரம் என்று பொருள்கொண்டு, ஸாரத்திலும் பரமயாரம் என்கிற விவக்ஷையாலே எம்மாவீட்டி லெம்மாவீடாய் என்றார்என்றுணர்க.
ஆட்செய், எனக்கு ஆட்செய், எனக்கே ஆட்செய், எக்காலத்தும் எனக்கே ஆட்செய்- என்று பிரித்துரைத்துப் பேரின சுவைப்படுத்துக. என்னை நியமித்துக் கொண்டு, என்னெஞ்சினுய்யேயே வந்து படுகாடு கிடக்கவேணும் நிலாத்தென்றல் சந்தனம் தண்ணீர்முதலிய பொருள்கள் போலத் தன்ககேயாக என்னைக் கொள்ளவேணும் இவ்வளவே நான் விரும்பும் புருஷார்த்தம் என்றாராயிற்று.
‘மயர்வற மதிநலமருளப் பெற்றவர்கள் தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே யென்று பிரார்த்திப்பானேன்? திருவுள்ளமானபடி செய்கிறான் என்றிருக்கையன்றோ அழகியது’ என்று பிள்ளை திருநறையூரரையர் எம்பாரைக் கேட்க, அதற்கு அவர் அருளிச் செய்த விடை-‘நீர்கேட்பது வாஸ்தவமே; ப்ராப்யருசி இங்ஙனே பிரார்த்திக்கப் பண்ணுகிறது’ என்று. எம்பெருமானுடைய திருமார்பிலே இடைவிடாது எழுந்தருளியிருக்கின்ற பிராட்டி வாளா இருக்கலாமே; அப்படியிராமே ‘அகலகில் லேனிறையும், அகலகில்லேனிறையும்’ என்று வாய்க்கொருமுறை சொல்லிக் கொண்டேயிருக்கிறாளே, அது ஏன்? அது விஷயஸ்வபாவம் படுத்துகிறபாடு என்னில், இது ப்ராப்யருசி படுத்துகிறபாடு என்று கொள்ளீர் என்று மருளிச் செய்தார்.
மனக்கு-அத்துச் சாரீயை பெறாமல் வந்தது. “மாடக்குச் சத்திரமும்” என்றதுங் காண்க. “மகக்கின்பம் படமேவும்” என்று ஒன்பதாம் பத்திலுமருளிச்செய்தார்.
சிறப்பு-முக்தி,செல்வம், நன்றி.
English Translation
My Lord resides in my heart forever saying, “Serve me alone of all times”. He has taken me as his own. This si indeed a blessing for us.
