(3101)
செய்யேல் தீவினையென் றருள் செய்யும்,என்
கையார்ச்சக்கரக் கண்ணபிரானே,
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே.
பதவுரை
|
தீ வினை செய்யேல் என்று |
– |
கெட்ட காரியங்களைச் செய்யாதே என்று |
|
அருள் செய்யும் |
– |
(என் திறத்தில்) கிருபை செய்தருளின |
|
கை ஆர்சக்கரம் |
– |
திருக்கையில் பொருத்தின திருவாழியை உடைய என் கண்ணபிரானே! |
|
ஐயார்கண்டம் அடைக்கிலும் |
– |
கோழை வந்து கழுத்தையடைக்கும்படியான துர்த்தசை நேர்ந்தாலும் |
|
நின் கழல் |
– |
தேவரீருடைய திருவடியை |
|
எய்யாது |
– |
துதிக்கும்படியாக |
|
எனக்கு அருள்செய் |
– |
என்னளவில் கிருயை பண்ணவேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உத்க்ரமான தசையான துர்க்கதிலும், நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணியருள வேணுமென்கிறார்.- கையும் திருவாழியுமாயிருக்கிற இருப்பைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்ட பெருமானே! நான் உம்மிடத்து துக்க நிவ்ருத்தியை விரும்புகின்றேனல்லேன்; நெஞ்சிலே கோழைகட்டிப் போய்த் தடுமாறும்படியான நிலைமை நேர்ந்தாலும் நேருக; அப்போதும் உன் திருவடிகளில் பக்தி குலையாமே துதிக்கும்படி செய்தருளினாற்போதும் என்றாராயிற்று. இங்கு “துர்க்கதாவபி ஜாதயாம் த்வத்கதோ மே மநோரத;, யதீ நாசம் ந விந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா.” என்ற ஜிதந்தாச்லோகம் அநுஸந்திக்கவுரியது. எம்பெருமானே! எனக்கு எப்படிப்பட்ட துர்க்கதி நேர்ந்தகாலத்தும், சிந்தனைமாத்திரம் உன்னைவிட்டு அகலாதிருக்குமாயின், அவ்வளவே நான் உய்யப் போதுமானது – என்பது மேற்குறித்த ச்லோகத்தின் கருத்து.
ஐயார்-ஐ என்று கோழைக்குப் பெயர் ஆர்விகுதி இழிவுப்பொருளது; ‘கோழைப் பையலார்’ என்பது நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி.
English Translation
O Krishna, Lord wielding the discus, guarding me against evil deeds! Grant that I may praise your feet forever, even when phlegm chokes my lungs.
