(3054)

(3054)

திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,

திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,

ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,

ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே

 

பதவுரை

ஒருவு இடம் ஒன்று இன்றி

நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்)

என்னுள் கலந்தானுக்கு

என்னோடு சேர்ந்தவானன

எந்தை பெருமாற்கு

என் சேர்ந்தவனான

திரு உடம்பு

திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது.

கண்

திருக்கண்கள்

செம் தாமரை

செந்தாமரை மலர்களாயிராநின்றன;

கை

திருக்ககைகள்.

கமலம்

தாமரைமலரே.

திரு இடமே

பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று;

கொப்பூழ்

திருநாபி

அயன் இடமே

பிராமனுக்கு உறைவிடமாயிற்று;

ஒருவு இடமும்

நீங்கின இடமும்

அரனே

ருத்ரனுடையதே;

ஆச்சரீரயம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிராட்டி முதலானவர்களும் தன் பக்கலில் ஒரோ. இடங்களைப்பற்றி ஸத்தை பற்றாராம்படியிருக்கிற எம்பெருமான் ஸகல அவயவங்களாலும் என்னோடீட ஸம்ச்லேகூஷித்து அத்தாலே ஒளிமல்கப் பெற்றனென்கிறார் இதில்.

ஒருவிடமொன்றின்றி என்னுள்   கலந்தானுக்கு  மார்வம் திருவிடம்; கொப்பூழ் அயனிடம்  ஒருவிடமும் அரன்; (இப்படிப்பட்ட எந்தைபெருமாற்கு என்னுள் கலந்ததனாலே) திருவுடம்பு வாந்சுடர்; கண் செந்தாமரை; கை கமலம்.

இப்பாசுரத்தை அநுபவிக்கும் போது நஞஜீயர் மிகவும் ஈடுபட்டு அருளிச்செய்வதொரு வார்த்தையுண்டு அதாவது—எம்பெருமானுக்கு விக்ரஹமில்லை விபூதியில்லை என்கிறவர்கள் முன்வே ஆப்ததமரான ஆழ்வார் திருவுடம்பு வான்சுடர் என்பதே! ஈச்வரனுக்கு விக்ரஹமில்லை குணமில்லை என்கிறவர்கள் பண்ணிவையாத பாபமில்லை; அவர்கள் அநுவர்த்தித்து அதுகேட்டுக்கொண்டிராதபடி பெருமாள் நமக்குப் பண்ணின உபகாரம் போலே வேறொரு உபகாரமுமில்லை-என்றாம்.

எம்பெருமான் வந்ததும் ஆழ்வாரோடே தன் திருமேனியை அனைத்து நின்றானைர் கையாலே அந்த ஸ்பாசஸூகம் கொண்டாடித் “திருவுடம்பு வான்சுடர்” என்கிறாரென்ப. உடனே குளிரக்சடாகூஷித்தருளினானாகையாலே “செந்தாமரை கண்” என்றார்;. கண்ணழகைக்கண்டு பரத்வங்கொண்டாடி இப்பரம புருஷனெங்கே! நாம் எங்கே என்று நைச்சியம் பாவித்து இறாய்த்தவளவிலே கையாலே பிடித்திழுத்தானாதலால் “கை கமலம் என்கிறார்.”

இவன் கேட்பாரில்லாதவனாய் நம்மிடம் வந்தானல்லன்; பிராட்டி முதலானவர்களும் இவனுடைய திருமேனியில் ஏகதேசங்களைப்பற்றி ஸத்தை பெறுமவர்களாக இருக்கிறார்களென்பதை இரண்டு மூன்றாமடிகளாலருளிச் செய்கிறார். தாமரை பூவில் பிறந்த பிராட்டியும் அதைவிட்டு இவன் திருமார்பை பற்றிக்கொண்டு ‘அகலகில்லினிறையும்’ என்று கிடக்கின்றாள்; பதினான் குலகம் படைக்கும் பிரமனோதிருநாபிக் கமலத்தை விடேனென்றிருக்கிறான்; நீங்கினவிடமோ ருத்ரனுடையதாயிராநின்றது.

ஒருவிடமும்  =  ஒருவுதல் நீங்குதலாய் நீங்கின விடமென்றபடி. தாமஸ தேவத்தையின் இருப்பிடத்தைச் சொல்லுகையாலே அநாதரம் தோற்ற ‘நீங்கின விடம்’ என்கிறார் என்பர்.

 

English Translation

He made love to me, no place untouched, His body has a great lustre, the lotus-dame Lakshmi sits on his chest. Brahma sits on his lotus navel and Siva in a corner, too, His eyes are like red lotuses, his hands are like lotus flowers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top