(3053)

(3053)

அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,

அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,

செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,

செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே.

 

பதவுரை

என் ஆவி

என் ஆத்மாவிலே

அம் தாமத்து அன்பு செய்து

பரமபதத்ததிற் பண்ணும் விருப்பத்தைப்பண்ணி

சேர்

வந்து பொருந்தின

அம்மானுக்கு

அம்தாமம்

அழகிய மாலையை யணிந்த

வாள்

ஒறியுள்ள

முடி

திருவபிஷேகமும்

சங்கு ஆழி

சங்கு சக்கரங்களும்

நூல்

பூணூலும்

ஆரம்

ஹாரமும்

உள

உள்ளன;

கண்

திருக்கண்கள்

செம் தாமரை  தடம்

செந்தாமரைத் தடதகமபோன்றுள்

செம் கனி வாய்

சிவந்து கனிந்த திருவதரம்

செம் கமலம்

செந்காமரையாகவே யிரா நின்றது;

அடிகள்

திருவடிகளும்

செம் தாமரை

செந்தாமரை மலராகவே

திரு உடம்பு

திருமேனி

செம் பொன்

செம்பொன்னாயிராநின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தாம் மனோரதித்தபடியே தன் பாரிகரங்கனோடே கூடவந்து தம்மோட கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த புகரைப் பேசுகிறார். இவர் தாம் கீழ்த்திருவாய் மொழியில் “ஒளிக்கொண்ட சொதியுமாய் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ” என்று திருநாட்டிலே சென்று அங்கு நித்யமுக்தர்களின் திரளிலே இருந்து அநுபவிக்ப்பெறுவதைப் பாரித்தாராகிலும் அஸ்மதாதிகளின் உஜ்ஜீவநத்திற்காக  எம்பெருமான் ஆழ்வாரை இந்நிரத்திலே இன்றும் சில நாளைக்கு வைத்திருக்கத் ஒருவாறு இந்நிலத்திலேயே காட்டி ஆச்வஸிப்பிக்கின்ற னென்றுணர்க

பரமபதத்திலுள்ளாரெல்லார்திறத்திலும் பண்ணும் ஆதரத்தை என்பக்கலிலே பண்ணி என்னோடேவந்து கலந்த பெருமானுக்கு அழகிய மாலையும் ஒளி பொருந்திய திருவபிஷேகமும் திருவாழி திருச்சங்குகளும் யஸ்ஞோபவிதமும திவ்யஹாரமும் உள்ளன; திருக்கண்களோ சிவந்த தாமரைத் தடாகமாயிராநின்றன; சிவந்து கனிந்த திருவதரமும் தாமரையா யிராநின்றது; திருவடிகளும் செந்தாமரையாகவே நின்றன; திருவுடம்போ செம்பொன்னாயிராநின்றது. என்னோடு கலந்த பின்பு அவனுடைய திருமேனியில் பிறந்த புகர் இங்ஙனே யிராநின்றது.

அந்தாமத்து ஸ்ரீ  தாம  என்னும் வடசொல் இங்குத் தாமமெனத் திரிந்தது. ஸ்தாநம் என்று பொருள். ஆகு பெயரால் பரமபத ஸ்தாநத்திலுள்ளவாகளான நித்யமுக்தர்களைச் சொல்லுகிறது. அவர்களிடத்துப் பண்ணும் அன்பை என்னிடத்தே பண்ணினானென்கிறது. இரண்டாமடியில் அந்தாமம் என்ற விடத்து தாம  என்ற வடசொல்லே திரிந்ததாகவுங் கொள்ளலாம் அப்போது ஒளி என்று பொருள். அச்சொல் வடநூல் நிகண்டுகளில் பலபொருளுடையது. ‘வாள்முடி’ என்றும் ‘வாழ்முடி’ என்றும் பாடபேதமுண்டு. இரண்டாமடி மழுதும் நித்யஸூரிகளைச் சொல்லி யிருப்பதால், அடியார்கள் குழாய்களை உடன்கூடுவதென்றுகொலோ என்று இவர் ஆசைபட்டபடியே நித்யஸூரிகளோடே வந்து கலந்தான் என்று ஆளவந்தாரருளிச் செய்தாராகத் திருமாலையாண்டான் பணித்தாரம். எம்பெருமானாரருளிச்செய்ததாவது-ஆழ்வாரோடு வந்து கலப்பதற்கு முன்பு அவனோடொக்க இந்த திவ்ய பூசண திவ்யாயுதங்களும் ஒளிமழுங்கி அஸத்கல்பமாயிருந்தன; இவரோடு கலந்த பூஷண த்வ்யாயுதங்களும் ஒளிமழுங்கி அஸத்கல்பமாயிருந்தன; இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவல்மாய் ஸத்தை பெற்றன; அது சொல்லப்படுகிறது இங்கும் — என்றாம்.

இப்பாட்டுக்கு மற்றொருவகையான நிர்வாஹமுமுண்டு அந்தராதித்யவித்யையில் சொன்ன ஹிரண்மய விக்ரஹயோகத்தையும் புண்டாரிகாகூஷத்வம் முதலிய அவயவசோபையையும் கிரிடமகுடாதி ஆபரண சோபையையும் சொல்லி, இப்படி ஆதிதியமண்டலத்திலே  திகழுமவன் ஆதித்யமண்டலத்தில் பண்ணும்விருப்பத்தை என்னெஞ்சிலே பண்ணிப்புகுந்து மிகவும் உஜ்ஜ்வலனாயிராநின்றான்–என்பதாம்.

 

English Translation

My Lord bears a garland, crown, conch and discus, thread and necklace, in a beautiful spot he made love to me, and blended with my soul. His big eyes are like lotus peals, his coral lips are like lotus flowers, his feet are like red lotus, his body glows like red gold.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top