(2866)

(2866)

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்

குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்

உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்

என்றனக் கும்அது,இராமா னுச! இவை யீந்தருளே.

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை

நிலைநின்ற பெரும் புகழும் அதிகமான நீர்ப்பெருக்கும் நிறைந்துள்ள

வேங்கடம் பொன் குன்றமும்

திருவேங்கட மென்னும் அழகிய திருமலையும்

வைகுந்தம் நாடும்

ஸ்ரீ வைகுண்டமாகிய திருநாடும்

குவலிய பால் கடலும்

கொண்டாடத்தக்க திருப்பாற்கடலும்

உன் தனக்கு

தேவரீருக்கு

எத்தினை இன்பம் தரும்

எவ்வளவு ஆநந்த்தை விளைக்குமோ

உன் இணை மலர் தாள்

தேவரீருடைய உபயபாதாரவிந்தங்கள்

என் தனக்கும் அது

எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை யுண்டாக்கும்;

இவை

இப்படிப்பட்ட திருவடிகளை.

ஈந்தருள்

அடியேனுக்குத் தந்தருள வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் அமுதனார்  விளக்கிய பரமபக்தியை அறிந்த எம்பெருமனார் மிகவும் உகந்தருளி ‘இவருக்கு நாம் எதை செய்வோம்’ என்றிருப்பதாகக் கண்ட அமுதனார், ஸ்வாமிந்! அடியேனுக்கு தேவரீர் வேறொன்றும் செய்தருள வேண்டர் அடியேனுக்கு ஸர்வஸ்மாகிய இந்தத் திருவடித்தாமரைகளைச் தந்தருள வேண்டுமத்தனை யென்கிறார்.

 

English Translation

O Ramanuja! Put together the joy that you derive from the famous stream-flowing Venkatam hills, the world of Vaikunta, and the fabled Ocean of Milk; I derive that same joy from contemplating your lotus feet. Pray grant me this.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top