(235)

(235)

பற்று மஞ்சள்பூசிப் பாவை மாரொடு பாடியில்

சிற்றில் சிதைத்துஎங்கும் தீமை செய்து திரியாமே

கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன்றின்பின்

எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

பாடியில்

திருவாய்ப் பாடியில்
பற்று மஞ்சள் பூசி

பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனியெங்கும் பெண்கள் கையால் தனித்தனியே) பூசப்பெற்று,
சிற்றில் சிதைத்து

(அப்பெண்கள்  இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி)
எங்கும்

எல்லாவிடங்களிலும்
தீமை செய்து

தீம்புகளைச் செய்து கொண்டு
பாவை மாரொடு

அவ்விடைப் பெண்களோடே
திரியாமே

திரியவொட்டாமல்,
கன்று

கன்றுகளினுடைய
தூளி உடை

தூள்களையுடைத்தாய்
வேடர்

(அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக்கிருப்பிடமான
கான் இடை

காட்டிலே
கன்றின் பின்

கன்றுகளின் பின்னே (திரியும்படியாக)
என் பிள்ளையை

என் மகனை
ஏற்றுக்கு போக்கினேன்

ஏதுக்காக அனுப்பினேன்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சளரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதைப் பரீக்ஷிப்பதற்காகக் கண்ணபிரானுடைய கரிய திருமேனியிலே பூசிப்பார்ப்பார்களாம்; ஆதலால் அம்மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பேர் பெற்றது. [கற்றுத்தூளி யித்யாதி.] கன்றுகள் திரள் நுகைத்துக் கிளப்பின தூள்கள் காடெங்கும் பாக்குமாதலால் கண்ணபிரானுடைய பொன் போல் மஞ்சனமாட்டின மேனி நிறம் மழுங்குமேயென்று வயிறெரிகின்றனள்.

English Translation

With bath-turmeric smeared all over, he would go around kicking the sand castles of girls, and make mischief everywhere. Instead, I sent him into the hunter’s forest covering him with the dust of grazing calves. O why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top