(234)
அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
பதவுரை
| அஞ்சனம் வண்ணனை |
– |
மைபோன்ற நிறத்தையுடையனும் |
| ஆயர் கோலம் |
– |
இடைக்கோலம் பூண்டுள்ளவனும் |
| கொழுந்தினை |
– |
(அவ்விடையர்க்குத்) தலைவனும் |
| பிள்ளையை |
– |
(எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை |
| மனைகள் தொறும் |
– |
(தன்வீட்டிற் போலவே) அயல்வீடுகள் தோறும் |
| திரியாமே |
– |
(இஷ்டப்படி) திரியவொட்டாமல் |
| மஞ்சனம் ஆட்டி |
– |
(காலையில் குள்ளக்குளிர) நீராட்டி, |
| கஞ்சனை |
– |
கம்ஸனை |
| காய்ந்த |
– |
சீறியுதைத்த |
| கழல் |
– |
வீரக்கழலை அணிந்துள்ள |
| அடி |
– |
திருவடிகள் |
| நோவ |
– |
நோம்படியாக |
| கன்றின்பின் |
– |
கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போவென்று) |
| என் செய போக்கினேன் |
– |
ஏதுக்காகப் போக விட்டேன்!; |
| எல்லே பாவமே |
– |
மஹாபாபம்! மஹாபாபம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆயர்கோலக் கொழுந்தினை-இடையர்களுக்கு அழகியகொழுந்து போன்றுள்ளவ னென்னவுமாம்; வேரிலே வெக்கை தட்டினால் முற்பட வாடுங் கொழுந்துபோலே, ஊரிலுள்ளாரில் ஆர்க்கேனும் ஒரு நோவுவந்தால் முற்படக் கண்ணபிரான் தன்முகம் வாடும்படியிருத்தலால் கொழுந்தெனப்பட்டான். “மஞ்சனமாட்டி” என்ற வினையெச்சம்-’போக்கினேன்’ என்பதோடு இயையும். கம்ஸனைச் சீறியுதைத்த திருவடிகள் ஏற்கனவே நொந்திருக்கும்; பின்னையும் நோவு விஞ்சும்படியாகக் காட்டுக்கனுப்பிய பாவியேனுடைய பாவநினைவு என்னாயிருந்ததென்று வயிறெரிகின்றனள். கழல்-வீரத்தண்டை. என் செய்-என் செய்ய; தொகுத்தல். எல்லே-இரக்கத்தைக் குறிக்கும் இடைச்சொல்.
English Translation
My dark hued Lord and master of the cowherd clan would have his bath, then go roaming from house to house. Instead I sent the child after the calves, hurting those tender feet that smote Kamsa. O, why did I do such a wicked thing?
