(2133)
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,
வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி
ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று.
பதவுரை
|
எண்மர் |
– |
அஷ்ட வஸுக்களும் |
|
பதினொருவர் |
– |
ஏகாதச ருத்ரர்களும் |
|
ஈர் அறுவர் |
– |
த்வாத சாதித்யர்களும் |
|
ஓர் இருவர் |
– |
இரட்டையரான அச்விநீ தேவதைகளும் |
|
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்) |
||
|
வைகலும் |
– |
நாள்தோறும் |
|
வண்ணம் மலர் ஏந்தி |
– |
நாநாவர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக்கொண்டு |
|
நண்ணி |
– |
(எம்பெருமானைக்) கிட்டி |
|
ஒரு மாலையால் |
– |
ஒப்பற்ற புருஷஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு |
|
ஓவாது |
– |
இடைவிடாமல் |
|
எப்போதும் |
– |
எல்லா வேலைகளிலும் |
|
பரவி |
– |
துதிசெய்து |
|
திருமாலை சென்று |
– |
திருமகள் கொழுநனைக்கிட்டி |
|
கைதொழுவர் |
– |
வணங்குவர்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அஹங்காரிகளான முப்பத்து மூவரமரர்களும் எம்பெருமானை யடிபணிந்தே சிறப்புற்றிருக்கின்றனரென்கிறார். முதலடியில் முப்பத்துமூன்றுதேவர்களை எடுத்துக் காட்டினது முப்பத்து முக்கோடி தேவர்களெனப்படுகிற அனைவரையும் எடுத்துக்காட்டினமைக்குப் பர்யாய மென்க. நம்மாழ்வாரும் பெரிய திருவந்தாதியில் “ இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர். எட்டோடொரு நால்வர் ஓரிருவர்” என்றருளிச்செய்தது காண்க.
English Translation
The eight vasus, the eleven Rudras, the twelve Adityas, the twin Asvins, -they all go with fresh flowers everyday without fail and chant praise, then offer worship with folded hands, to our Lord Tirumal. ‘
