(1999)
பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும்,
தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே.
பதவுரை
|
ஏடீ |
– |
தோழீ! |
|
அன்று |
– |
பாரதப்போர்நிகழ்ந்த அக்காலத்தில் |
|
பார் |
– |
பூமியிலுள்ள |
|
மன்னர் |
– |
அரசாகள் யாவரும் |
|
மங்க |
– |
மாளும்படியாக |
|
வெம் சமத்து |
– |
வெவ்விய போர்க்களத்திலே |
|
படைதொட்டு |
– |
(பிரதிஜ்ஞைக்குமாறாக)ஆயுதமெடுத்து |
|
தேர்மன்னற்கு |
– |
தேர்வீரனான அரிஜுனனுக்கு |
|
ஆய் |
– |
துணையாய்(ஸராதியாகி) |
|
தேர் ஊர்ந்தான் காண் |
– |
தேரைநடத்தினான் காண். |
|
சாழலே |
– |
தோழீ! |
|
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் |
||
|
தார் மன்னர் தங்கள் |
– |
வெற்றி மாலைபுனையும் அரசர்களுக்கெல்லாம் |
|
தலை மேலான் |
– |
தலைமேல் வீற்றிருப்பவன் காண். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தோழீ! நீ உகக்கும் பெருமான் மெய்யனுமன்று; மேனாணிப்புடையவனுமன்று; பாரதப்போரில் ஆயுதமெடுப்பதில்லை யென்று பிரதிஜ்ஞை செய்துவைத்து ஆயுதத்தை யெடுத்தான்; அஃது எப்படியாயினுமாகுக் எல்லாருங் காணும்படி யுத்த பூமியிலேதான் தேர்ப்பாகனாய் நின்று இழிதொழிலைச் செய்தானே; இது தகுதியோ? என்ன் “ராஜாதிராஜ்! ஜா;வேஷாம்” என்கிறபடியே, அரசாக்ளென்று மார்பு நெறிந்திருப்பாரெல்லார்தலையிலும் ஏறி வீற்றிருக்கும்படியான பெருமைவாய்ந்த அப்பெருமான் பார்த்தன் தன் தேர்முன் நின்று பெருங்குணத்தை வெளியிட்டுக்கொண்டானத்தனை என்று அறியமாட்டிற்றிலையோ! என்று மற்றொருத்தி மறுமொழி கூறினாளாயிற்று.
English Translation
“Aho, Sister! Killing the haughty kings in a terrible war when the charioteered kings took up arms and fought, he served as a chariot-driver, see!”.
“But though he served as a chariot-driver for the charioteered kings, the victorious ones worshipped him with his feet on their heads, so tally!”.
