(1718)
வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
பதவுரை
|
முது முந்நீர் |
– |
கடல் வெள்ளம் |
|
வானோர் அளவும் |
– |
தேவர்களின் எல்லையளவும் |
|
வளர்ந்த காலம் |
– |
பரந்து சென்ற காலத்திலே |
|
வலி உருவின் மீன் ஆய் வந்து |
– |
வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து |
|
வியந்து |
– |
ஆச்சரியப்படும்படியாக |
|
உய்யக்கொண்ட |
– |
எல்லாரையும் பிழைப்பித்தருளின |
|
தண் தாமரை கண்ணன் |
– |
குளிர்ந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும் |
|
ஆனா உருவின் ஆன் ஆயன் அவனை |
– |
விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை, |
|
அம் |
– |
அழகிய |
|
மா |
– |
பரந்த |
|
விளை |
– |
விளைவுமிக்க |
|
வயலுள் |
– |
வயல்களை யுடையதும் |
|
கான் ஆர் புறவில் |
– |
காடுகள் செறிந்த பர்யந்தங்களை யுடையதுமான |
|
கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்திலே |
|
அடியேன் கண்டு கொண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மத்ஸ்யாவதாரம் செய்தருளின பெருமானைத் திருக்கண்ணபுரத்தில் காணப்பெற்றேனென்கிறார்.
வலியுருவின் மீனாய் = வந்து இவ்விடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்; – “கடல் வெள்ளத்தைத் தன்னுடைய ஒரு செலுவிலே அடக்கவல்ல மத்ஸ்யமாய் வந்து” என்பதாம். செலுவாவது – மீனின் உட்புறத்தேயுள்ள முள்; ‘செதிள்’ எனவும் படும். அன்றி, செலுவாவது – மீன்செட்டை. யெனப்படும் மீன் சிறகு என்றுஞ் சொல்லுவர். “மான யோசனை யளவொழி மெய்யுருவாய்ந்த, மீனமாயினனெடுங்கடற் பரவையின் வீழ்ந்து, கானவெண்டிரைக் கருங்கடலளறெழக் கலக்கிப், போன வாளெயிற் றசுரனைத் தடவுறும் புகுந்து” (கந்த புராணம் – உபதேச காண்டம்) என்றபடி எம்பெருமான் எண்ணிடற்கரிய மிகப்பல யோஜனை நீளமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்த பெருமீனான போது அந்த மத்ஸ்யத்தின் ஒரு செலுவினகத்தே கடல் வெள்ளம் முழுவதும் ஒடுங்கும்படி யிருந்த தென அதன் பெருமை தோன்ற ‘வலியுருவின் மீனாய்’ என்றது.
ஆனாவுருவின் = “ஸதைகரூபரூபாய” “அவிகாராய சுத்தாய” என்கிறபடியே என்றும் ஒரு படிப்பட நின்று விகாரமற்ற வுருவையுடையவன் என்கை. அப்படியாகில், மத்ஸ்யகூர்மாதி ரூபமான விகாரவுருக்களைக் கொண்டது என்னோவெனின்; கருமமடியாகக் கொண்டிலன்; க்ருபையடியாகக் கொண்டவத்தனை. விகாரமற்றவனென்று பிரமாணங்கள் சொல்லுவ தெல்லாம் கருமநிபந்தனமான விகாரமில்லாமையையே யென்றுணர்க.
English Translation
In the days of yore when the ocean rose sky-high and flooded the land, the Lord came as a huge fish and gave deliverance to the world. He is the coal lotus-eyes invincible cowherd-lad krishna. I know he is in kannapuram, surrounded by fertile fields and thick forsts.
