(1717)

(1717)

மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை

வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்

கலியன தமிழிவை விழுமிய இசையினொடு

ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே.

 

பதவுரை

மலி புகழ்

நிறைந்த புகழையுடைய

கணபுரம்

திருக்கண்ணபுரத்தை

உடைய

இருப்பிடமாகவுடைய

எம் அடிகளை

எம்பெருமான் விஷயமாக

வடி கெழு

திண்மை பொருந்திய

மதிள்

மதிளையும்

அயல்

சுற்றுப்புறங்களில்

வயல்

கழனிகளையும்

அணி

அலங்காரமாகக்கொண்ட

மங்கையர்

திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான

கலியன

திருமங்கையாழ்வாருடைய

இவை தமிழ்

இத்தமிழ்ப் பாசுரங்களை

விழுமிய இசையினொடு

சிறந்த இசையோடு கூட

ஒலி சொலும்

அப்யஸிக்கின்ற

அடியவர்

பக்தர்கள்

உறு துயர் இலர்

அவச்யமபவிக்குப்படியாக ஏற்பட்ட துக்கங்களினின்றும் விடுபட்டவராவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கலியன = அ – ஆறாம் வேற்றுமையுருபு.

இத் திருமொழியின் இசை பரமபோக்கியமாதலால் ‘விழுமிய விசையினொடு’ என்றது.

 

English Translation

These Tamil songs by kaliyan, king of stone-walls-and-fertile-fields-surrounded Mangai fract, extol the celebrated Lord of kannapuram. Devotees who consing it funefully will have no karmic sin.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top