(1715)

(1715)

படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு

கொடிபுல்கு தடவரை அகலம துடையவர்

முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்

கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே.

 

பதவுரை

முடி புல்கு

நாற்று முடிகளோடு கூடியிருக்கிற

நெடு வயல்

விசாலமான கழனிகளிலே

படை

கலப்பைகளை

செல

செலுத்தும்போது

அடி

கால்பட்ட

மலர்

(தாமரை முதலிய) பூக்களானவை

கடி புல்கு

பரிமளத்தைப் புறப்பட விடப்பெற்ற

கணபுரம்

திருக்கண்ணபுரம்;-

பலர் தொழ

பல பக்தர்கள் வணங்கும்படியாக

படி புல்கும் அடி இணை உடையவர்

பூமியை யளாவிய திருவடியிணையை யுடையவரும்

மலர் வைகு

தாமரைமலரில் பொருந்திய

கொடி

கொடிபோன்ற பெரிய பிராட்டியார்

புல்கு

அணையப்பெற்ற

தடவரை அகலம் அது உடையவர்

பெரிய மலைபோன்ற திருமார்பை யுடையவருமான

அடிகள் தம்

ஸ்வாமியினுடைய

இடம்

திவ்யதேசமாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கழனிகளில் நடுகைக்காக எங்கும் பரம்பிக்கிடக்கிற நாற்று முடிகள் மூன்றாமடியிலுள்ள ‘முடி’ என்னுஞ் சொல்லுக்குப் பொருள். அவை நிரம்பிய பெரிய வயல்களிலே உழவர்கள் கலப்பையைக்கொண்டு புகுந்து நடத்துவர்கள்; காலாலே ஒருகால் குழப்புவர்கள்; அவ்வளவிலே இடையிலே தப்பிக்கிடந்த தாமரைப்பூவானது பரிமளத்தைப் புறப்படவிடுமாம்.  “படைநின்ற பைந்தாமரையோடு அணிநீலம் மடைநின்றலரும் வயலாலிமணாளா” (11-8-6) என்றபாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.- வயல்களிலெங்கும் தாமரை முதலிய மலர்கள் மணங்கமழப் பெற்ற திருக்கண்ணபுரம் *அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறைமார்பனுடைய திவ்ய தேசம் என்றதாயிற்று.

படிபுல்குமடியிணை பலர்தொழ = முன்பு உலகமளந்த திருவடிகளைத் திருக்கண்ணபுரத்திலே பலரும் வணங்கும்படியாக என்றுமாம்.  படி – பூமி.  மலர்வைகுகொடி – பெரியபிராட்டியார்.  ‘கொடி’ என்பது ஸ்த்ரீஜாதிக்கு உவமையாகு பெயர்.

 

English Translation

The Lord who measured the Earth with his feet and who bears the lotus-dame Lakshmi on his mountain-like-chest resides in kannapuram where ploughed fertile fields made ready for transplantation carry the fragrance of lotus blossoms.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top