(1707)
கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை,
திருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன்,
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார்
இருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
பதவுரை
|
கரு மா முகில் |
– |
கறுத்துப் பெருத்தமேகங்கள் |
|
தோய் |
– |
வந்து படியப் பெற்ற |
|
நெடு மாடம் |
– |
பெரிய மாளிகைகளையுடைத்தான |
|
கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற |
|
எம் அடிகளை |
– |
எம்பெருமான் விஷயமாக, |
|
திருமாமகளால் |
– |
பெரிய பிராட்டியாரடியாக |
|
அருள்மாரி |
– |
‘அருள் மாரி’ என்ற திருநாமம் பெற்றவரும் |
|
செழு நீர் ஆலி வளம் நாடன் |
– |
ஜலஸம்ருத்தியையுடைய திருவாலி வளநாட்டுக்குத் தலைவரும் |
|
மருவு ஆர் புயல் கை |
– |
எப்போதும் நிலைத்திருக்குந் தன்மைவாய்ந்த காளமேகத்தோடொத்த ஔதார்யத்தை யுடையவரும் |
|
மங்கை வேந்தன் |
– |
திருமங்கைக்குப் பிரபுவுமான |
|
கலிகன்றி |
– |
ஆழ்வார் அருளிச்செய்த |
|
ஒலி |
– |
இப்பாசுரங்களை |
|
வல்லார் |
– |
கற்றுவல்லவர்கள் |
|
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி |
– |
(பூமியும் ஸ்வர்க்கமுமாகிற) இரண்டு உலகங்களுக்கும் அரசராயிருக்கப்பெற்று, |
|
(மேல் பரமபதத்திலுஞ்சென்று) |
||
|
இமையோர் |
– |
நித்தியமுக்தர்கள் |
|
இறைஞ்ச |
– |
ஸத்கரிக்கும்படி |
|
வாழ்வார் |
– |
வாழப்பெறுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
இருமா நிலத்துக்கு அரசாகி = இரண்டு மாநிலத்துக்கும் (பூமிக்கும் ஸ்வர்க்கத்துக்கும்) அரசாகி – என்று பொருள் கொள்வதன்றியே, இருமை – பெருமையாய், பெரிதான இம்மா நிலத்துக்கு அரசாகி என்று கொள்ளவுமாம்.
English Translation
This garland of poems by generous Alinandon kalikanri, king of fortune-favoured Mangai fract, extols the Lord of cloud-touching mansions-surrounded kannapuram. Those who master it will live as king on earth, and be praised by gods.
