(1706)

(1706)

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக,

வன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன்,

சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து,

கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.

 

பதவுரை

குன்றால்

கோவர்த்தன மலையினால்

மாரி

பெருமழையை

பழுது ஆக்கி

பயனற்றதாம்படி செய்தவனும்

அன்று

முன்பொருகால்,

கொடி ஏர் இடையாள் பொருட்டாக

கொடிபோன்று அழகிய இடையை யுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக

வல் தாள் ஏழ் விடை

வலிய கால்களையுடைய ஏழு ரிஷபங்களை

அடர்த்த

வலியடக்கினவனும்

வானோர் பெருமான்

நித்யஸூரிகளுக்குத் தலைவனும்

மா மாயன்

ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனும்

பஞ்சவர்க்கு ஆய்

பஞ்சபாண்டவர்களுக்காக

தூது சென்றான்

(துரியோதனன் பக்கல்) தூது சென்றவனும்

திரி கால் சகடம்

ஊர்ந்து செல்லுங்காலையுடைய சகடத்தின்

சினம்

பகையை

அழித்து

அழித்தவனும்

கன்றால்

வத்ஸாஸுரனைக் கொண்டு

விளங்காய் எறிந்தான்

கபித்தாஸுரன்மேல் வீசியெறிந்து இருவரையும் முடித்தவனுமான பெருமானுடைய

ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.

 

English Translation

The Lord of gods, the wonder Lord who stopped the rains with a mount and destroyed seven bulls for the stender-waisted Nappinnai, who went as a messenger for the kings, who smote a cart with his foot, who threw a calf against a wood-apple tree –resides in kannapuram Let us offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top